Skip to main content

''நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது'' -ரஜினியிடம் உருகிய சசிகலா புஷ்பா

Published on 19/10/2019 | Edited on 21/10/2019

 

இமயமலைக்கு சென்றிருந்த ரஜினிகாந்த் நேற்று இரவு டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை திரும்பினார். கடந்த 18ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தடைந்த அதே விமானத்தில் பயணித்திருக்கிறார் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா. விமானத்தில் ரஜினிகாந்த் அமர்ந்திருப்பதை பார்த்ததும், உற்சாகம் அடைந்த சசிகலா புஷ்பா, ரஜினியிடம் சென்று ''அண்ணா வணக்கம், நான்தான் சசிகலா புஷ்பா'' என அறிமுகப்படுத்திக்கொண்டார்.

 

sasikala pushpa - rajinikanth




 


'சசிகலா புஷ்பா' என்ற பெயரை கேட்டதும் சட்டென எழுந்த ரஜினிகாந்த், ''வணக்கம்... வணக்கம்... ரொம்ப சந்தோஷம்'' என சொல்லியிருக்கிறார். ''அண்ணா நீங்க உட்காருங்கள்'' என சசிகலா புஷ்பா சொல்ல, ''பரவாயில்லம்மா... நீங்க எப்படி இருக்கீங்க...'' என்று நலம் விசாரித்த ரஜினியிடம், ''தமிழக அரசியலில் தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது. ஒரு நல்ல தலைவர்தான் தமிழகத்தில் நல்ல முதலமைச்சராக இருக்க முடியும். அந்த வகையில் ஒரு நல்ல தலைவராக உங்களைத்தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து எனக்கு கிடைக்கக்கூடிய தகவல்கள் 'ரஜினி அரசியலுக்கு வருவாரா?' என்பதுதான். அந்த கேள்வியே உங்களைத்தான் நல்ல தலைவராக மக்கள் நினைப்பதாக எனக்கு தோன்றுகிறது. அதனால் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும்'' என வலியுறுத்தியிருக்கிறார் சசிகலா புஷ்பா. 
 

 

 

சசிகலா புஷ்பாவின் அந்த வார்த்தைகளை கேட்டு, ''மிக்க மகிழ்ச்சி...'' என்று சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினியுடன் பேசியதில் உற்சாகமாக இருக்கிறார் சசிகலா புஷ்பா. 


 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.