Skip to main content

அமைச்சர் வீட்டில் ரெய்டு! கடுப்பான அ.தி.மு.க

Published on 23/02/2019 | Edited on 04/03/2019

"பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைச்சாச்சு, இனியாவது நிம்மதியா இருக்கலாம்'' என தமிழக அமைச்சர்கள் நினைத்துக் கொண்டிருந்தபோதே ஐ.டி.ரெய்டு நடத்தி, அவர்களை அலற விட்டிருக்கிறது பா.ஜ.க. மேலிடம். அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டு ரெய்டுக்கு காரணமான சில ஃப்ளாஷ்பேக் சம்பவங்களைப் பார்ப்போம்.

வேலூர் புது பஸ் ஸ்டாண்டுக்கு அருகே சுந்தர் ராஜன் என்பவருக்குச் சொந்தமான 6.9 ஏக்கர் காலி நிலம்(மார்க்கெட் மதிப்பு 280 கோடி) உள்ளது. இந்த இடத்தை பிரபல ரியல் எஸ்டேட் வியாபாரிகளான ராமமூர்த்தி-ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் இணைந்து 2010 ஆகஸ்டில் சுந்தர்ராஜனிடமிருந்து பவர் எழுதி வாங்கு கின்றனர். இந்த இடவிற்பனையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான ராணிப்பேட்டை காந்தியின் மகன் சந்தோஷ், நந்தகுமாரின் மச்சான் பிரகாஷ், மணல் மாஃபியா சேகர் ரெட்டி, உத்தம்சந்த் ஆகியோர் பார்ட்னர்களாக கைகோர்க்கின்றனர்.

ministerhouse-raid



ஜெ. ஆட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் சந்தோஷும் பிரகாஷும் விலகுகின்றனர். 2013-ல் அந்த இடத்தைப் பார்த்த அமைச்சர் வீரமணி, 5 ஆயிரம் சதுர அடியை மட்டும் 30 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாக முடிவாகிறது. ஆனால் ஒரு வருடம் கழித்து, தனது நண்பர் திருமலா பால் கம்பெனியின் உரிமையாளரான பிரம்மானந்த தண்டாவை, ராமமூர்த்தியிடம் அறிமுகப்படுத்தி, மொத்த இடத்தையும் வாங்க ஏற்பாடு செய்கிறார் வீரமணி. இடம் விற்பனை யானது தெரிந்ததும் பழைய பார்ட்னர்கள் தங்களது பங்கை கேட்டு நெருக்கடி தருகின்றனர். சென்னையில் ஒரு ஸ்டார் ஓட்டலில் வீரமணி முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது.

இப்படி ஏகப்பட்ட சுத்தல்கள் இருக்கும் போதே அந்த இடத்தைக் கைப்பற்ற களத்தில் இறங்குகிறார் அமைச்சர் வீரமணி. இது குறித்து வேலூர் எஸ்.பி.யிடமும் டி.ஐ.ஜி.யிடமும் புகார் கொடுத்தும் பலனில்லாததால், மேலிட மாளிகை யின் செயலாளர் உதவியை ராமமூர்த்தியும் ஜெயப்பிரகாஷும் நாடுகிறார்கள். அங்கிருந்து வந்த உத்தரவுக்கும் மதிப்பில்லாததால், வீரமணியின் சொத்து விபரங்களோடு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறார்கள். ஃப்ளாஷ்பேக் ஓவர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியி லிருந்து ஸ்பெஷலாக அனுப்பப்பட்ட வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தலைமையில் தமிழக அதிகாரிகளும் கைகோர்த்து அமைச்சர் வீரமணியின் ஜோலார்பேட்டை, திருமண மண்டபம், ஏலகிரி, திருப்பத்தூரில் உள்ள ஹோட்டல்கள், வீரமணியின் பினாமி சிவக்குமாரின் வீடு, திருமலா பால் கம்பெனி, ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் வீடுகள் என 30 இடங்களில் ரெய்டு அடித்திருக்கிறார்கள். இந்த ரெய்டில் சிக்கியது ஒரு "கைப்பை' மட்டுமே என்கிறார்கள்.

""பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்வதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருபவர் வீரமணி. அந்தக் கோபம்தான் இப்போது ரெய்டாக வந்து நிற்கிறது''’ என்கிறார்கள் வேலூர் அ.தி.மு.க. புள்ளிகள்.



 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.