Skip to main content

எடப்பாடி பேச்சை நம்பாத ஓபிஎஸ்!கோபத்தில் அமைச்சர்கள்!

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

மத்திய அரசில் தனது மகனுக்கு கிடைக்க வேண்டிய மந்திரி பதவியை வைத்தியலிங்கத்தைத் தூண்டிவிட்டு தடுத்துவிட்டதாக எடப்பாடி மீது ஏகத்துக்கும் கோபத்தில் இருந்தார் ஓ.பி.எஸ். இதுகுறித்து எடப்பாடியிடமே தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்திய போது, "தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே வாரணாசியில் அமித்ஷாவை சந்தித்து அமைச்சரவையில் இடம்கேட்டு கோரிக்கை வைத்தீர்கள். ஆனால், பாசிட்டிவ் சிக்னல் கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வந்ததற்குப் பிறகு, "கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு அமைச்சர் பதவி தான்' என உறுதி தந்த பா.ஜ.க. தலைமை, அ.தி.மு.க. வுக்கு அந்த வாய்ப்பையும் கூட தரவில்லை. உங்கள் மகனின் வாய்ப்பை நான் தடுத்துவிட்டேன் என சொல்வது அபாண்டம்'’ என ஓ.பி.எஸ்.சை சமாதானப்படுத்தினார் எடப்பாடி. அவரது பேச்சை ஓ.பி.எஸ். நம்பவில்லை. இருவருக்குமிடையே நீறுபூத்த நெருப்பாக பூசல் கனன்று கொண்டிருக்கிறது'' என்கிறார்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.
 

ops



இதற்கிடையே, பல் வலிக் காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய எடப்பாடியை, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் கே.சி. வீரமணி, உதயகுமார் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் அங்கிருந்திருக்கிறார்கள். இந்த சந்திப்பின்போது வீரமணியும் உதயகுமாரும் எடப்பாடியிடம் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறார்கள்.


அ.தி.மு.க. மேல்மட்டத்தில் இந்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படும் நிலையில்... இது குறித்து விசாரித்தபோது, ""தன்னை சந்தித்த அமைச்சர்களிடம் இயல்பாக பேசிய எடப்பாடி ஒரு கட்டத்தில், "ஆட்சியையும் கட்சியையும் நான் மட்டுமே காப்பாத்த வேண்டியதிருக்கிறது. தேர்தலில் அமைச்சர்கள் யாருமே ஒழுங்கா வேலை பார்க்கலை. ஒவ்வொரு மாவட்டத்துலயும் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியும்' என வீரமணியையும் உதயகுமாரையும் பார்த்தவாறே கடிந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி.

  udhayakumar



அவரது பேச்சை ரசிக்காத வீரமணி, "தேனி தொகுதியில் கட்சியை ஓ.பி.எஸ். ஜெயிக்கவெச்ச நிலையில் சேலத்துல ஏன் உங்க ளால ஜெயிக்க வைக்க முடியல? ஏகப்பட்ட கோடிகளை கொட்டியும் உங்க சொந்த ஊரிலே யே தி.மு.க. அதிக வாக்கு வாங்கியிருக்கு. ஆனா உங்க அளவுக்கு நாங்களும் செலவு செஞ்சிருந்தா, நாங்க ஜெயிச்சிக் காட்டியிருப்போம்' என எகிற, "எவ்வளவு செலவு செய்யணும்னு லிஸ்ட் கொடுத்தோமே' என எடப்பாடி சொல்ல, "பணம் கொட்டுற இலாகாக் களை நீங்களே வெச்சிருக்கீங்க. இலாகாவை மாத்தி கொடுங்க. கட்சியையும் ஆட்சியையும் நாங்க காப்பாத்துறோம்' என கடுமையாக எகிறியிருக்கிறார் வீரமணி. இடையிடையே உதயகுமாரும் எடப்பாடியிடம் கோபம் காட்டியிருக்கிறார். ஆனால் எடப்பாடியால் எந்த பதிலையும் பேசமுடியவில்லை'' என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள். கட்சியும் ஆட்சியும் கல கலத்துப் போயிருப்பதால் கவலையில் வீழ்ந்திருக்கிறார் எடப்பாடி.
 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.