Skip to main content

"சிவகார்த்திகேயன் பெரும் ஆதரவாக இருந்துள்ளார்" - 'ஆர்.ஆர்.ஆர்' பட விழாவில் இயக்குநர் ராஜமௌலி பாராட்டு 

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

director rajamouli talk about sivakarthikeyan

 

இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜனவரி மாதம் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்நிலையில் படத்தின் ப்ரீ புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் ராஜமௌலி நடிகர் சிவகார்த்திகேயனை வெகுவாக பாராட்டியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் கூறுகையில்," ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெரும் ஆதரவைத் தந்துள்ளார். ட்ரைலர், போஸ்டர் எனப் படம் குறித்து எந்தவிதமான அறிவிப்பு வெளியானாலும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இதயப்பூர்வமான பங்களிப்பை நல்கி உள்ளார். படத்திற்கு உறுதுணையாக இருந்ததற்கும், இவ்விழாவிற்கு வந்ததற்கும் எனது நன்றி" எனக் கூறியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்