Skip to main content

குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய பிரசன்னா! 

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

prasanna

 

 

கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் மாயாபஜார் 2016. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் சுந்தர்.சி பெற்றார். லாக்டவுன் முடிந்து தமிழ்ப் பட ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கியவுடனே இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு ஒரே மாதத்தில் முடிக்கப்பட்டது.

 

பிரசன்னா, யோகி பாபு, அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படத்தை பத்ரி இயக்கியிருந்தார். ஒரே மாதத்தில் படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் முடிக்கப்பட்டு, ரிலீஸுக்கு தயாரானது. திரையரங்கம் மற்றும் ஓடிடியிலேயே இதுவரை நேரடியாக படங்கள் வெளியாகி வந்த நிலையில் நேரடியாக சாட்டிலைட் டிவி சேனலில் இப்படம் வெளியிடப்பட்டது.

 

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகனான பிரசன்னா, ஷூட்டிங்கின்போது ஒரு குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவியிருக்கிறார். மருத்துவமனையில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றபோது ஒரு தம்பதியர் பிரசன்னாவை சந்தித்துள்ளனர். அவர்களோ புகைப்படம் எடுக்க வந்துள்ளனர் என நினைத்து, புகைப்படம் எடுத்துள்ளார் பிரசன்னா.

 

அந்த சமயத்தில் தங்களுடைய குழந்தையின் இதய அறுவை சிகிச்சை தொடர்பான விவரங்களைக் கூறியுள்ளனர். மேலும், அந்த சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருவதை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுடைய குழந்தையின் விவரங்கள் அனைத்தையும் கேட்டு வாங்கியுள்ளார் பிரசன்னா.

 

பின்பு தனக்குத் தெரிந்த மருத்துவர்கள் மூலமாக விசாரித்து, குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு 1.5 லட்ச ரூபாய் உதவி செய்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது, பிரசன்னாவின் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

“போயிட்டு வாப்பு...” - மாரிமுத்துவிற்கு பிரசன்னா அஞ்சலி!

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Actor Prasanna  pays tribute to actor Marimuthu

 

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகப் பல்வேறு படங்களில் நடித்தவர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள் படத்தில் நாயகியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் வில்லன் நடிகரோடு துணையாக வலம் வருவார். சின்னத்திரையில் வெளியாகும் சீரியல் ஒன்றில் குணசேகரன் என்ற கதாபாத்திரம் மூலம் பட்டி தொட்டியெங்கும் இவர் சென்றடைந்தார். அதுவும் குறிப்பாக “இந்தாம்மா... ஏய்...” என இவர் சீரியலில் பேசும் வசனம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வருகிறது.

 

இன்று காலை டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்காகத் தேனி எடுத்துச் செல்ல உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Actor Prasanna  pays tribute to actor Marimuthu

 

இந்நிலையில் நடிகர் பிரசன்னா, நடிகர் மாரிமுத்துவிற்கு  தன்னுடைய  எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அஞ்சலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இயக்குநர் மாரிமுத்துவின் மறைவு அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். கண்ணும் கண்ணும், புலிவால் இணைந்து பணியாற்றினோம். எங்களுக்குள் சகோதரர்கள் போன்ற ஒரு பந்தம் இருந்தது. பலவற்றில் கருத்து வேறுபாடுகளை ஒப்புக்கொண்டோம். அவரது வாழ்க்கை எளிதானது அல்ல. ஆனால், ஒரு நடிகராக அவர் இறுதியாக நன்றாகத்தான் இருந்தார். அவர் இன்னும் சிறிது காலம் அங்கேயே அப்படியே இருந்திருக்க வேண்டும். வருத்தம். போயிட்டு வாப்பு... ” என்று குறிப்பிட்டுள்ளார்.