Skip to main content

பிக்பாஸில் சச்சினை பற்றி குறிப்பிட்டு அழுத முன்னாள் வீரர்...

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
sreesanth


ஹிந்தி மொழியில் பிக்பாஸ் நிகழ்ச்சி `12 சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஒரு போட்டியாளராக உள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்த் தனது சக போட்டியாளரான அனுப் ஜலோடாவிடம் ஸ்ரீசாந்த் சச்சினை பற்றி பகிர்ந்துகொண்டார். அப்போது,” சச்சின் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2011 உலகக்கோப்பை நடந்து 1-2 ஆண்டுகள் கழித்து நடந்த ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சச்சினிடம் என் பெயரை தவிர வேறு எல்லாரின் பெயரும் அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால், இறுதியில் சச்சின் அவரே என் பெயரை குறிப்பிட்டு என் பங்களிப்பு முக்கியமானது என்றார், அதைக் கேட்டவுடன் மனம் உடைந்து நெகிழ்ச்சியில் அழுதுவிட்டேன்” என்றார்.
 

சார்ந்த செய்திகள்