Skip to main content

பறிபோகிறதா தங்கம்? கோமதி ஊக்கமருந்து சோதனை..

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

கடந்த மாதம் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றவர் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து. இவருக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
 

gomathi

 

 

இந்நிலையில் கோமதி தடை செய்யப்பட்ட ஸ்டெராய்டு போன்ற பொருட்களை பயன்படுத்தியதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என டெக்கன் ஹெரால்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
 

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கோமதி, "இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. இப்படி ஒன்று பேசப்படுவதை நானே செய்திதாளை பார்த்து தான் தெரிந்துகொண்டேன். இதுகுறித்து தேசிய தடகள சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டுள்ளேன். எதன் அடிப்படையில் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டது என தெரியவில்லை" என கூறினார். மேலும் இதுகுறித்து பேசிய கோமதியின் சகோதரரும் இந்த செய்தியை மறுத்துள்ளார். 
 

இந்நிலையில் கோமதியிடம் நடைபெற்ற முதற்கட்ட ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஊக்கமருந்து சோதனைகள் அனைத்தும் நிரூபனமானால் தங்கப்பதக்கம் அவரிடம் இருந்து பறிக்கப்படும்.

 

இந்நிலையில், கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி. இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை என்று கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

கோமதி மாரிமுத்து தடகளப் போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் தடை...

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

gomathi marimuthu banned from athletics for four years


ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனையான கோமதியின் ஆசியப் போட்டி தங்கப் பதக்கம் பறிக்கப்படுவதோடு, அவருக்குப் போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 
 


கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் தோகாவில் நடந்த ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தடை செய்யப்பட்ட ஸ்டெராய்டு போன்ற பொருட்களைப் பயன்படுத்தியதற்கான முகாந்திரம் இருப்பதால் அவருக்கு இடைக்காலத் தடை விதித்து இந்தியத் தடகள சம்மேளனம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. 

ஆசியப் போட்டியில் போது ஊக்கமருந்து சோதனைக்காகக் கோமதியின் சோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் நான்ட்ரோலோன் எனும் ஸ்டெராய்ட் மருந்தை அவர் எடுத்துக்கொண்டது உறுதியாகியுள்ளதாகவும் என்று ஆசியத் தடகள சம்மேளனம் தெரிவித்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட 'பி' மாதிரி சோதனையும் கோமதிக்கு எதிராக அமைந்த நிலையில், அவருக்குப் போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டுகள் தடை விதித்துள்ளது அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு. 

 

 

 

Next Story

எதோ புதுசு புதுசா சொல்ராங்க.. எனக்கு எதுவுமே தெரியாது- கோமதி பேட்டி...

Published on 28/05/2019 | Edited on 28/05/2019

கடந்த மாதம் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றவர் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து. கோமதி தடை செய்யப்பட்ட ஸ்டெராய்டு போன்ற பொருட்களை பயன்படுத்தியதற்கான முகாந்திரம் இருப்பதால் அவருக்கு இடைக்கால தடை விதித்து இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது.

 

gomathi marimuthu about dope test and b sample test

 

 

ஆசிய போட்டியில் போது ஊக்கமருந்து சோதனைக்காக கோமதியின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் நான்ட்ரோலோன் எனும் ஸ்டெராய்ட் மருந்தை அவர் எடுத்துக்கொண்டது உறுதியாகியுள்ளதாகவும் என்று ஆசிய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கோமதிக்கு இடைக்கால தடை விதிப்பதாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. மேலும் பி சாம்பிள் சோதனை செய்யப்படும் எனவும், அதில் கோமதி தோல்வியடைந்தால் வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கோமதி மீதான இந்த புகாரை அவரும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கோமதி கூறுகையில், "நான் ஊக்க மருத்து எடுத்திருப்பதாக சொல்கின்றனர். அந்த மருந்தின் பெயர் கூட எனக்குத் தெரியாது. புதிய புதிய பெயர்களை சொல்கின்றனர். அதனை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நான் ஊக்கமருந்து எடுக்கவில்லை, அதனால் நம்பிக்கையுடன் உள்ளேன். பி சாம்பிள் முடிவுக்காக காத்திருக்கிறேன். அந்த முடிவில், எனக்கு எந்த பிரச்சினையும் வராது என நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.