Published on 30/11/2018 | Edited on 30/11/2018

இலங்கை அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவி வரும் இந்த நேரத்தில், அங்கு பிரதமர் பதவிக்காக சண்டையிட்டுக்கொள்ளும் ராஜபக்சேவும், ரணில் விக்ரமசிங்கேவும் இன்று சந்தித்துள்ளனர். இலங்கை நாடாளுமன்ற வளாகத்திற்குள் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இருவரும் என்ன பேசி கொண்டார்கள் என்ற தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.