Skip to main content

ஈராக்கில் தரைமட்டமான ஆயுதகிடங்கு - இதுவரை 18 பேர் பலி

Published on 08/06/2018 | Edited on 08/06/2018

ஈராக்கில் ஆயுதக் கிடங்கில் திடீரென விபத்து ஏற்பட்டதால், அந்த கிடங்கு கட்டிடமே வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில்  18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 90 பேர் படுகாயமடைமந்துள்ளனர்.

 

iraq

 

 

 

ஈராக்கிலுள்ள சதர் நகரில் ஷிடே என்னும் இசுலாமிய மதத்தில் ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மசூதி அருகிலுள்ள ஒரு வீட்டில் ஒரு கும்பல் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் போன்ற பொருட்களை பதுக்கி வைத்துள்ளது. அங்கு ராக்கெட் மற்றும் கையெறிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்றவை வைக்கப்பட்டு இருந்துள்ளது.

 

 

 

இந்நிலையில், நேற்று காலை எதிர்பாராதவிதமாக ஆயுதங்கள் பதுக்கிவைத்திருந்த இடத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டடிம் இடிந்து தரைமட்டமாகியது. இந்த விபத்தினால் அருகிலிருந்த கட்டிடங்களும் பலத்த சேதமடைந்தன. விபத்தில் உடல் சிதறி பலர் பலியாகினார்கள். இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.              

சார்ந்த செய்திகள்