Skip to main content

எந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் மேலும் 21 பேருக்கு கரோனா!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

kl


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 59 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. 
 


சீனாவில் கரோனா முதலில் உருவானதாக நம்பப்படும் வேளையில் அங்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. 4,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனா நோய்த் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக நோய்த் தொற்று இல்லாமல் இருந்து வந்த சீனாவில் தற்போது மீண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது. நேற்று அந்த அறிகுறியும் இல்லாமல் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவர் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் வெளிநாட்டில் இருந்து சீனா திரும்பியவர்கள் ஆவார்கள்.


 

 

சார்ந்த செய்திகள்