Skip to main content

மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்! (படங்கள்)

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்(88) உடல்நலக் குறைவால் காலமானார். முதலில் கரோனா தொற்றில் இருந்து மீண்டார். பிறகு, சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக நேற்று முன்தினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

 

மறைந்த தா.பாண்டியனின் உடலுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சென்றும் சமூக வலைதளங்கள் மூலமும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் டி.டி.வி தினகரன், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எனப் பல்வேறு தலைவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தா.பாண்டியனுக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும், நல்லகண்ணு, முத்தரசன், வைகோ, வீரமணி, இல.கணேசன், வைரமுத்து, வேல்முருகன், சீமான், டி.டி.வி தினகரன், திருமாவளவன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் எனப் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.  

 

 

 

 

சார்ந்த செய்திகள்