Skip to main content

ஓட்டுப் போடுவது எனக்குப் பெருமை! -மனம் திறந்த நடிகர் அஜித்!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

I'm proud to vote! -A open minded actor Ajith!

 

தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தென்சென்னைக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் சீனியர் சிட்டிஷன்கள் முதல், முதன்முறை வாக்காளர்கள் வரை காலையிலேயே வாக்குச் சாவடிக்கு விரைந்து வந்ததை பார்க்க முடிந்தது. கியூவில் நின்று அவர்கள் வாக்களித்தனர். சீனியர் சிட்டிசன்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தனி கியூ வைத்திருக்கலாம் என்கிற ஆதங்கம் பலரிடமும் வெளிப்பட்டது.

 

அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் ஆர்வமுடன் வாக்குச் சாவடிக்கு வந்தனர். வாக்குச் சாவடிக்கு வந்த சினிமா பிரபலங்களில் முதல் நபராக இருந்தார் நடிகர் அஜித் திருவான்மியூர் அரசு பள்ளிக்கூடத்தில் அமைந்திருந்த வாக்குச் சாவடிக்கு தனது மனைவி சாலினியுடன் காலை 6.40-க்கெல்லாம் வந்து விட்டார் நடிகர் அஜித்.

 

மனைவியைத் தவிர தன்னுடன் யாரையும் அஜித் அழைத்து வரவில்லை. அவரை கண்டதும் வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் அலுவலர்களும், அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளும் அவர்களை உட்காரச் சொன்னார்கள். ஆனால் அஜித்தும் அவரது மனைவியும் , ’’வேண்டாங்க! நன்றி ‘’ என்று சொன்னார்கள். 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியதும் வரிசையில் நின்று அவர்கள் வாக்களித்தனர். அஜித் வந்திருப்பதையறிந்து அவரிடம் பேசுவதற்கு இளம் வாக்காளர்கள் முயற்சித்தனர். அதனை விரும்பாத அஜித், ‘’இது ஓட்டுப் போடக்கூடிய இடம். எங்களை சாதாரண மனிதராக பாருங்கள் ‘’ என்று கைப்கூப்பினார் அஜித்.

 

தேர்தல் அலுவலர் ஒருவர், ‘’ காலையிலேயே வந்துவிட்டீர்களே, சார் ?’’ என்று கேட்க , ‘’ ஓட்டுப் போடுவதைப் பெருமையாக நினைக்கிறேன். முதல் நபராக நான் வரும் போது, என்னை பார்க்கும் எனது ரசிகர்களுக்கு காலையிலேயே ஓட்டுப் போட வேண்டும் என்கிற உந்துதல் அவர்களுக்கு கிடைக்கலாம். ஓட்டுப் போடுவதை பெருமையாக நினைத்து வாக்குச் சாவடிக்கு மக்கள் வர வேண்டும் என்பதற்காகத்தான், வாக்களிக்கும் முதல் நபராக நாம் இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தில் காலையிலேயே வந்தேன். தேர்தல்னு வந்தால் வாக்களிக்கும் முதல் நபராக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் ‘’ என்று சொல்லி, தேர்தல் அலுவலரை வியப்பில் ஆழ்த்தினார் நடிகர் அஜித்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.