Skip to main content

உற்சாகமான உயரத்தை தொட்டுள்ளது பங்குச்சந்தை-வானதி சீனிவாசன் பேட்டி 

Published on 21/09/2019 | Edited on 13/12/2019

கோவையில் காந்திபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவகத்தில் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

மேற்கு தமிழகத்தின் குறிப்பாக கோவை, திருப்பூர், சேலம் போன்ற சிறுகுறு தொழிலாளர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கை ஏற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி சீர்திருத்தம், வரி குறைப்பு அதற்கான அறிவிப்பை நேற்று அறிவித்துள்ளார்.

அதன்பின்னர் நம்முடைய பங்குச்சந்தை உற்சாகமான உயரத்தை தொட்டுள்ளது. மேலும் புதிய நம்பிக்கை கொடுத்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை இந்தியா எவ்வாறாக இருந்தாலும் எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாக இந்தியாவை முன்கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுத்துவருது தற்போதைய வரி சீர்த்திருத்தம் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

 

vanathi sreenivasan press meet

 

மேலும் அண்மையில் 5 தொழில் அமைப்புகளை நிதி அமைச்சர் நேரில் சந்தித்துள்ளார், அப்போது நானும் உடன் இருந்தேன் மோட்டர், டெக்ஸ்டைல், சர்க்கரை , சிவில் மற்றும் தங்கம் சங்கள் நிதி அமைச்சரை சந்தித்தனர். அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒவ்வொரு தொழில் சம்பந்தப்பட்ட வரி விலக்குகள் அளிக்கப்பட்டு வருகிறது. வெட் கிரைண்டர் உற்பத்தி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தொழில் துறையினரை சந்தித்து குறைகளை கேட்டும் வருகிறார் நிதி அமைச்சர். 

வெட் க்ரைண்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 5% ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது. ஜாப் ஆர்டர் ஜி.எஸ்.டி 12% குறைந்துள்ளது. மேலும் வங்கி கடன் வழங்குவதை குறித்து மத்தியமைச்சர் சாமியான அமைத்து மக்களுக்கு தொழில் தொடங்க, மோட்டர் வாகனம் வாங்க தேவையான கடன் உதவியை அளிக்க வேண்டும் என புதிய வழிவகை மக்களுக்கு காண்பித்துள்ளார். 

மேலும் நாடு முழுவதும் மாபெரும் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போதைய பாஜக அரசு மக்களுடன் பேசும் அரசாகவும், மக்களின் பிரச்சனை கேட்டறிந்து அதன் மீதான நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாக அமைந்துள்ளது. மேலும் இரயில்வே துறையில் தமிழர்கள் தாண்டி வட மாநிலத்தவர்கள் அதிகம் தேர்வாகியுள்ளது குறித்து ஊடகங்களில் பார்த்தேன். இதுகுறித்தான கருத்தை நாம் ஆழமாக பார்க்க வேண்டும் எவ்வளவு பணியிடங்கள்?? எவ்வளவு பேர் தேர்வு எழுதியுள்ளார்கள், அதில் எவ்வளவு பேர் தமிழர்கள் என பல கேள்விகள் உள்ளது. முழுமையாக தெரிந்துகொண்டு கருத்து தெரிவிப்பதாக கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.