Skip to main content

வழிப்பறி திருடர்கள் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

Two robbers were arrested in goondas law!

 

சேலத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த வழிப்பறி திருடர்கள் இருவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

சேலம், அழகாபுரம் காட்டூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர், கடந்த ஆண்டு டிச. 31ம் தேதி, சொந்த வேலையாக மிட்டாபுதூர் ஆண்டிச்சி அம்மன் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரவுடிகள் இருவர் அவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, சிவராஜ் வைத்திருந்த 6500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின்பேரில் அழகாபுரம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 


விசாரணையில், சேலம் பெரிய புதூரைச் சேர்ந்த பழனிவேல் மகன் அஜித்குமார் (27), சிவக்குமார் மகன் மணிகண்டன் என்கிற குள்ளமணி (24) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் சம்பவத்தன்றே காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். 

 

Two robbers were arrested in goondas law!

 

இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே அடிதடி, திருட்டு சம்பவம் தொடர்பாக கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் ஒரு வழக்கும், திருட்டு, வழிப்பறி குற்றங்கள் தொடர்பாக அழகாபுரம் காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகளும் பதிவாகி இருப்பது தொடர் விசாரணையில் தெரிய வந்தது.

 

இவர்களில் ரவுடி அஜித்குமார் ஏற்கனவே 6 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாலும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாலும் அஜித்குமார், மணிகண்டன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமி, காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடாவுக்கு பரிந்துரை செய்தார். 

 

அதன்பேரில் ரவுடிகள் இருவரையும், காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.