Skip to main content

வெற்றிகரமான தோல்வி தமிழிசைக்கு!

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

 

கல்யாணத்திற்கு போன இடத்தில் திடீர் மாப்பிள்ளை ஆன கதை மாதிரி, தமிழிசைக்கு தூத்துக்குடியில் நாடாளுமன்ற சீட் கிடைத்தது. ஸ்டெர்லைட் பிரச்சனையால் தூத்துக்குடியை யார் பக்கமாவது தள்ளிவிடலாம் என்ற அதிமுக கணக்குப் போட்டு வைத்திருந்தது. 

 

இந்த நேரத்தில் பியூஸ் கோயல் சென்னை வந்து அதிமுக கட்சித் தலைவர்களிடம் கூட்டணி பேச்சு பேசினார். பல சுற்றுப் பேச்சு நடத்தி ஒரு வழியாக 5 சீட்டை பிஜேபிக்கு ஒதுக்க முன் வந்தது அதிமுக.  இதனால், பிஜேபியில் இருக்கிற 5 தலைவர்களுக்கு சீட் உறுதி என்பது அப்போதே பரவலாக பேசப்பட்டது.

 

t

 

அப்படி 5 தொகுதிகளை ஒதுக்கும்போது, பிஜேபிக்கு செல்வாக்கே இல்லாத தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 2 தொகுதிகளை அதிமுக தந்திரமாக தள்ளிவிட்டது. வேறு வழியில்லாமல் தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்திர ராஜன், தூத்துக்குடி கடலில் தாமரை மலர்ந்தே தீரும் என்று வீர வசனம் பேசினார். விளாத்திகுளத்தில் ஓட்டுக் கேட்கும்போது வெங்காயத்தால் செய்யப்பட்ட தாமரை பூ வரவேற்பை கண்டு புளகாங்கிதம் அடைந்தார். 

 

அதிமுக கூட்டணியில் பிஜேபி சேர்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் அதிமுகவை கழுவி கழுவி ஊத்திய தமிழிசை, கூட்டணி சேர்ந்த உடன் அண்ணன் எடப்பாடியார் நல்லாட்சி செய்கிறார் என்று மாற்றி பேசினார். இபிஎஸ்சும், பிரச்சாரத்தின்போது தமிழிசையை வல்லவர், நல்லவர் என வானளாவ புகழ்ந்தார். ஆனால், தூத்துக்குடி மக்கள் உப்பு விளைவிக்கிறவர்கள். அந்த ரோசமும், உணர்வும் உடம்பில் இருக்கும் என்பதை தேர்தல் முடிவின் மூலம் காட்டி விட்டனர். 

 

எப்படி எச்.ராஜா சர்ச்சையில் பேசி முகம் சுழிக்க வைப்பாரோ? அதற்கு சற்றும் குறைவில்லாமல் தமிழிசை பேசுவார். சென்னையில் இருந்து அதிகாலை கோவை கிளம்புவார். சென்னை விமான நிலையத்தில் அப்போது ஒரு பேட்டி அளிப்பார். அப்புறம் கோவை விமான நிலையத்தில் இறங்கும்போது ஒரு பேட்டி. (விமானத்தில் பறந்த அந்த ஒரு மணிநேரத்தில் அப்படி என்ன தலைகீழ் மாற்றம் வந்திருக்கப்போகிறது?) கோவையில் கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனைக்கு பிறகு ஒரு பிரஸ் மீட். பிறகு சென்னை கிளம்பும்போது கோவை விமான நிலையத்தில் ஒரு பிரஸ்மீட், அப்புறம் சென்னை வந்திறங்கிய பிறகு ஒரு பிரஸ்மீட். 

 

இதே நிலை தான் டெல்லி, தூத்துக்குடி போன்ற பயணங்களின் போதும் நடக்கும். கோவாவில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் இறந்து போனார். அதற்கு துக்கம் விசாரிக்க செல்லும் போதும் பிரஸ்மீட் அவசியம் தானா?. பத்திரிக்கையாளர்கள் விமான நிலையத்திற்கும் போகவில்லை என்றாலும் காத்திருந்து எதையாவது சொல்லிவிட்டு போவது தான் தமிழிசையின் ஸ்டைல். அது தான் அவருக்கு எதிர்வினை. 

 

இப்போது கூட, "எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று பார்லிமென்டில் போய் வெளிநடப்பு செய்யப்போகிறார்கள் என்று சொல்கிறார். இது எதிர்கட்சிகளை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் தம்மை தாமே தரம் தாழ்த்திக் கொள்கின்ற செயல்". என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

 

தோல்வி என்பது தமிழிசைக்கு புதிதல்ல. அவர் 5 வது முறையாக தோல்வி கண்ட தேர்தல் இது. முதல் முறையாக 2006-ம் ஆண்டு ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் பிஜேபி வேட்பாளராக களம் இறங்கினார். அந்த தேர்தலில் அவர் 5,343 வாக்குகள் பெற்று 5-வது இடத்தை பிடித்தார். திமுகவை சேர்ந்த அப்பாவு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

 

2009-ல் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அப்போது அவர் பெற்ற வாக்குகள் 23,350

 

2011-ல் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை, 7,048 வாக்குகள் பெற்று 4-வது இடம் பிடித்தார். அந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக் வெற்றி பெற்றார்.

 

2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட தமிழிசை 19,167 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தார். இப்போது தூத்துக்குடியில் அவர் பெற்ற வாக்குகள் 2,14,497, ஆனால் அவரை விட கனிமொழி 3 லட்சத்து 45, 848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கனிமொழியின் மொத்த வாக்குகள் 5,60,345.

 

முந்தைய தேர்தலில் தமிழிசை தோல்வி அடையும் போது,  "எனக்கு வெற்றிகரமான தோல்வி, எதிர்க்கட்சிகள் தாற்காலிகமாக (தற்காலிகமாக என்பதே சரியானது) வெற்றி பெற்றதாக" கூறி சமாளிப்பார். இந்த வெற்று பேச்சு, சமாளிப்பு எல்லாம் தான் தமிழகத்தில் தாமரையை மலரவிடாமல் செய்துவிட்டது என்பதை தமிழிசை உணர்ந்தால் சரி.

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.