தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்று பொதுமக்கள் உணவுகளுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் இறைச்சி வகைகளை வாங்க மார்க்கெட்டில் குவிந்து வருகின்றனர்.
திருச்சி குழுமணி சாலையில் உள்ள காசிவிளங்கி மீன் சந்தையில் மீன் இறைச்சிகள் வாங்க தனிமனித இடைவெளி இன்றியும், முகக் கவசம் அணியாமலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.