Skip to main content

வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தவர்களின் மீது டிராக்டர் ஏறி இருவர் பலி!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த செத்தமலைப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி 27 வயதான காளியம்மாள். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

 

Tiruppattur incident

 



மார்ச் 3 ந்தேதி காலை காளியம்மாள் மற்றும் அவருடைய பாட்டி 60 வயதான நீலா இருவரும் வீட்டிற்கு வெளியே சமையல் செய்து கொண்டு இருந்தனர். அப்போது சுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த 22 வயதான சுரேந்தர், தண்ணீர் டிராக்டரில் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் நிரப்பிக் கொண்டு அந்த வழியாக அதிவேகமாக  வந்துள்ளார்.

காளியம்மாள் சமையல் செய்து கொண்டிருந்த இடத்திற்கு அருகில் ஜல்லி கொட்டப்பட்டு இருந்துள்ளது. தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் ஜல்லியின் மீது ஏறி நிலைகுலைந்து காளியம்மாள், அவரது பாட்டி நிலா மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காளியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த முதியவர் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக நாட்றாம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமைத்துக் கொண்டிருந்த பெண் மீது டிராக்டர் மோதி பலியான சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் பலி; புனித நீராடச் சென்றபோது நிகழ்ந்த சோகம்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
The tragedy that happened when I went to take a holy bath and 15 passed away in tractor overturn

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள புனித நீரான கங்கை நதியில் ஏராளமான மக்கள் ஆண்டுதோறும் நிகழும் மகா பெளர்ணமி தின நாளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம், கஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தினர் ஏராளமானோர், மகா பெளர்ணமியை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடுவதற்காக இன்று (24-02-24) காலை டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, முன்னே சென்றுகொண்டிருந்த கார் மீது மோதுவதைத் தடுக்கும் முயற்சியில் டிராக்டர் ஓட்டுநர் ஈடுபட்டிருந்தார். ஆனால், டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக, அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 7 சிறுவர்கள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது அவர்களுக்குத் தெரியவந்தது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பலியானோரின் குடும்பத்துக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் அறிவித்துள்ளார். கங்கை நதியில் புனித நீராடச் சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
15 lose their live as tractor overturns in pond

உ.பியில் டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கங்கை நதியில் புனித நீராட பக்தர்களை டிராக்டரில் ஏற்றிச் சென்ற பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டரில் மக்களை ஏற்றிக் கொண்டு கங்கை நதியில் புனித நீராடல் நிகழ்த்துவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது குளத்திற்கு அருகே உள்ள சாலை பகுதியில் சென்ற டிராக்டர்  திடீரென கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்தது. இதில்  டிராக்டரில் பயணித்த அனைவரும் குளத்தில் மூழ்கினர். இதில் முதற்கட்டமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்ததும் அந்த பகுதிக்கு விரைந்த மக்கள் மற்றும் மீட்புப் படையினர் ஒன்றிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில், மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கங்கை நதியில் புனித நீராட சென்றவர்கள்  குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.