Skip to main content

'அரிக்கொம்பனை பிடிக்க மூன்று கும்கி'- அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

Published on 28/05/2023 | Edited on 28/05/2023

 

bb

 

தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் பகுதியில் முகாம்மிட்டுள்ள அரிக்கொம்பன்யானை பிடிப்பதற்கு வனத்துறையினரும் போலீசாரம் தீவிர தேடுதலை வேட்டையில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு கம்பம் நகர் பகுதியில் முகாமிட்டிருந்த அரிசி கொம்பன் அதிகாலையில் சுருளிப்பட்டி வழியாக சுருளிமலைப் பகுதிக்கு சென்று தற்பொழுது மேகமலை சென்றதாக தெரிய வருகிறது.

 

இந்தநிலையில் கம்பத்துக்கு வந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்த லைவர் ஷஜீவனா உள்பட வனத்துறை அதிகாரிகளுடன் அரிக்கொம்பன் பிடிப்பதற்கு ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்கள் மத்தியில் அமைச்சர் மதிவேந்திரன் பேசும்போது,  அரிக்கொம்பன் என்ற அரிசிக்கொம்பன் என்னும் யானை கிட்டதட்ட 35 வயது மிக்க ஆண் யானை. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கேரள மாநில வனத்துறையினரால் பிடிப்பட்டு, முல்லைக் கொடி பகுதிக்குட்பட்ட பெரியார் புலிகள் வனப்பகுதியில் 29.04.2023 அன்று விடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, யானை வண்ணாத்திப்பாறை வனப்பகுதியான தேனி மாவட்டம், மேலக்கூடலூர் கிராமப்பகுதிக்கு 30.04.2023 அன்று வந்துள்ளது.

 

மேலும், ஹைவேவிஸ் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் யானை வருகை தந்துள்ளது. அதனைத்தொடாந்து 26.05.2023 அன்று தேனி மாவட்டம், குமுளி பகுதியில் சுரங்கணாறு தனியாருக்கு சொந்த மான ஒரு விளைநில பகுதியில் 27.05.2023 அன்று சுமார் மாலை 4.00 மணி அளவில் யானை காணப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு சில நபர்களால் யானைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து, கெஞ்சிகவுண்டன் குளம் மின்சார வாரிய துணை நிலையத்திற்கு அருகில் யானை இருப்பதை கண்டறிந்த வனத்துறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல் துறையை சார்ந்தவர்கள் யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்ட போது, ட்ரோன் கேமிரா மூலம் ஒரு நபர் ஒளிப்பதிவு செய்ததன் மூலம் யானைக்கு இடையூறு ஏற்பட்டு, காந்திநகரில் இருக்க கூடிய கம்பம் - குமுளி புறவழிச் சா லை வாழை தோட்டத்தில் இருந்துள்ளது.

 

ஒவ்வொரு இடத்திலும் ஏற்பட்ட இடையூறுகளால் யானை பயத்திற் குட்பட்டு ஒவ்வொரு இடத்திலிருந்து மாறி, மாறி பயணம் செய்து வந்துள்ளது. எதிர்பாரத விதமாக கம்பம் நகர்பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களுக்கு சில இடையூறுகளை ஏற்படுத்திவுள்ளது. இதனை அறிந்த, மாவட்ட நிர்வாகம், வனத்துறை, கவால்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, நகர்பகுதியிலிருந்து யானை வெளியேற்றப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

குறிப்பாக யானையை பாதுகாப்பாக பிடிப்பதற்கு பல்வேறு குழுக்கள் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்து, திறம்பட செயல்பட்டு கொண்டிருக்கிறது. பொதுமக்கள் வெளியே செல்லும் யானையினால் ஏதவாது தருணத்தில்  பாதிப்பு ஏற்படாக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு பொது மக்கள் மற்றும் யானையை பாதுகாத்திடும் பொருட்டு ஒரு அமைதியான நிலை மையை கொண்டு வந்துயானையை பிடிப்பதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யானையை பிடிப் பதற்கு பல்வேறு குழுக்கள் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர், குறிப்பாக வனத்துறைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இரவு, பகல் பாராமல் யானையை பிடிப்பது அல்லது வனப்பகுதியில் விடுத்வத ற்கான அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

தற்போது, யானை கூத்தநாட்சி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, வானொலி கழுத்துப் பட்டை கருவி யானைக்கு பொருத்தப்பட்டு யானை எங்கே இருக்கிறது என்பதனை ரேடியோ ரிசீவர் மூலம் யானை எங்கு இருக்கிறது எங்கு செல்கிறது என்பதனை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானை எப்போது கேரள மாநிலத்திலிருந்து பெரியார் புலிகள் வனப்பகுதியில்  எப்போது விடப்பட்டதோ அப்போதிருந்தே தொடர்ந்து நமது தமிழ்நாடு வனத்துறையினரால் தொடர்ந்து யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் குறிப்பாக நகர் பகுதிக்குள் யானை வருகின்றபோது தகவல்கள் சரிவர கிடைக்க இயலாது. மீதமுள்ள இடங்களில் யானை எங்கு செல்கின்ற தகவல் தொடர்ந்து தகவல் கிடைத்து கொண்டிருக்கும். பொதுமக்களால் ஏற்படும் இடையூறுகளால் யானையின் அச்சத்தின் காரணமாக தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டி சிலவற்றை சேதபடுத்துகின்ற சூழ்நிலை ஏற்படுத்துகின்றது. இதனால் யானையை அமைதிப்படுத்தி பிடிப்பதற்கு நடவடிக்கைகளும் மேற் கொள்ளபட்டு வருகிறது.  டாட்டிங் கன்ஸ் பயன்படுத்தக் கூடிய 5 பேர் சார்ந்த பிரகாஷ் என்பவர் தலைமையில் மருத்துவக் குழுவினர்கள் வரவழைக்கப்பட்டு, யானை பிடிக்க கூடிய ஒரு சூழலில் டாட்டிங் கன்ஸை பயன்படுத்தி, யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும், மூன்று கும்கி யானைகள் மாவட்டத்திற்கு யானையை பிடிப்பதற்கு வரவழைக்கப்பட்டு, தற்போது இரண்டு கும்கி யானைகள் வருகை தந்துள்ளது.

 

இன்னொரு யானையும் வந்து கொண்டிருக்கிறது. டாட்டிங் கன்ஸை பயன்படுத்தி யானையை மயக்க நிலையில் பிடித்தாலும் கும்கி யானைகளை பயன்படுத்தி அதனை வாகனத்தில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானையினை பிடிப்பது மிகவும் சவலான விஷயம், யானையை பாதுகாப்பாக பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

மீண்டும் நகர்ப்பகுதிக்குள் யானை வரதாவண்ணம் மருத்துவக்குழு வனத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள், சிறப்பு யானை கண்காணிப்பாளர்கள், காவல்துறையினர், மாவட்ட நிர்வாகமும் மக்களிடமி ருந்து யானைக்கும், யானையி டமிருந்து மக்களுக்கும் எந்த பாதிப்பு ஏற்பாடாத வகையில், இரவு பகலாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். நேற்றைய தினம் கூட யானை சந்தைப்பகுதியில் செலக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனை கவால் துறையினர் துரிதமாக செயல்பட்டு யானையினை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி தேவைக்கேற்ப 144 தடை உத்தரவு வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே யானையை பாதுகாப்பாக பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும்'' என்று கூறினார்.
                       

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.