Skip to main content

யாரும் எதிர்பார்க்காத மொமென்ட்! -சுதந்திர தின விழா சுவாரஸ்யம்!

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
Unexpected Moment! -Free Independence Day Celebration

 

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற 74-வது சுதந்திர தின விழாவில் நடந்த சுவாரஸ்யம் இது –

திருவண்ணமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இ.ஆ.ப., கோவிட் 19 கரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த 78 முன்களப் பணியாளர்களுக்கு கேடயம், பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அப்போது, காவல்துறை பணியில் இரவு பகல் பாராமல் பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும்போது, இன்ஸ்பெக்டர் அல்லிராணியை மேடையில் நிற்கவைத்து, மாவட்ட ஆட்சியராகிய கந்தசாமி, பரிசு வாங்கும் இடத்தில், அதாவது கீழே நின்று சல்யூட் அடித்தார்.

அப்போது எடுத்த புகைப்படத்தை, இன்ஸ்பெக்டர் கவிதா, அல்லிராணியை தனது பேஜ்மேட் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டு  ‘யாரும் எதிர்பார்க்காத மோமென்ட்’ என வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர் அல்லிராணி இத்தனை மரியாதைக்குரியவராக எப்படி ஆனார்?  

இரண்டு மாதங்களுக்கு முன், வந்தவாசி அருகிலுள்ள நாவல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அமாவாசை, ஏரிப்பட்டு கிராமத்திலுள்ள கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி இறந்துபோனார். இதுகுறித்து தகவலறிந்த தெள்ளார் இன்ஸ்பெக்டர் அல்லிராணி விசாரணை மேற்கொண்டார். அமாவாசையின் உடலை பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தபோது, கரோனா அச்சத்தால், உடலைத் தூக்க உறவினர்கள்கூட முன்வரவில்லை. அல்லிராணியோ, ஆட்டோ டிரைவர் உதவியுடன், தானே அந்த உடலைத் தூக்கி அனுப்பிவைத்தார்.  

இன்ஸ்பெக்டர் அல்லிராணியின் அந்த நேரத்து அறச்செயல், குறளொன்றை நினைவுபடுத்துகிறது –

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்


இக்குறளுக்கான விளக்கம் : இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.