Skip to main content

திருவள்ளூர் வங்கி கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? காவல்துறை விசாரணை விவரம்!

Published on 30/05/2018 | Edited on 30/05/2018

திருவள்ளூர் வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கொள்ளையர்கள் காவல்துறையினரின் விசாரணையில் அடுத்தநாளே பிடிபட்டனர். நகைகள் திருடுபோன வங்கியில் கிடைத்த தடயங்களை வைத்து கொள்ளையர்கள் தீவிர விசாரணையில் குதித்த காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி தலைமையிலான குழுவின் தேடுதல் வேட்டை விவரம் இதோ..
 

திருவள்ளூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை கிளை, கடந்த திங்கள்கிழமை காலை வழக்கம்போல் திறக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்தபோது நகை லாக்கர்கள் திறக்கப்பட்டு, கொள்ளையடிக்கப் பட்டிருப்பதைக் கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகாரளித்த நிலையில், காவல்துறையினர் வங்கிக்கு நேரடியாக சென்று விசாரணையைத் தொடங்கினர். 
 

Bank

மீட்கப்பட்ட நகைகளுடன் காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி

 

வங்கியில் நகைக்கான லாக்கர்கள் மட்டும் திருடுபோயிருந்தன. ரொக்கப்பணமாக எதுவும் களவுபோகாத நிலையிலும், லாக்கர்களோ, சுவரோ உடைக்கப்படாமல் இருந்ததும் காவல்துறையினரிம் சந்தேகத்தை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் 8 பேரிடம் நடத்திய விசாரணையில், வங்கியின் அலுவலக உதவியாளர் விஸ்வநாதனுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வழக்கம்போல் அலுவலகத்தை மூடுவதற்கு முன்பாக சிசிடிவி மற்றும் எச்சரிக்கை அலாரங்களை விஸ்வநாதன் ஆஃப் செய்துள்ளார். அதோடு வங்கியின் லாக்கர் கதவுகள் மற்றும் முக்கிய கதவினை மூடிய விஸ்வநாதன் அவற்றின் சாவிகளை வங்கி மேலாளர் மற்றும் துணை மேலாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
 

அதன்பிறகு, சிறிதுநேரம் கழித்து வந்த விஸ்வநாதன் தன்னிடம் இருந்த மற்றொரு போலியான சாவியை வைத்து லாக்கர்களைத் திறந்து, நகைகளை மட்டும் கொள்ளையடித்து, அவற்றை திட்டமிட்ட இடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார். மேலும், இந்தக் கொள்ளையில் தொடர்புடைய வங்கியின் தரைதளத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஜெய்கணேஷ் மற்றும் அவரது நண்பர் கணேஷ் ஆகியோர் நகைப்பையை எடுத்துச்சென்றுள்ளனர். தற்போது கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட இம்மூவரும் கைதுசெய்யப்பட்டு, நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

பாஜக மாநில நிர்வாகி வீட்டில் பறக்கும்படை சோதனை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Air force raids BJP state executive's house


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதேநேரம் தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகி ஒருவர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் என்பவர் வீட்டில் பறக்கும் படையானது சோதனை நடத்தி வருகிறது. திருவள்ளூரில் பாஜக சார்பில் பணம் பட்டுவாடா செய்வதற்காக நிர்வாகி வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து,  பாடிய நல்லூரில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.