Skip to main content

‘பாஸ்டேக்’ குறுஞ்செய்தியால் உஷாரான உரிமையாளர்... விடாப்பிடியாக விரட்டி பிடித்த காவலர்கள்!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

The thief who escaped with the jewelery and money

 

தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் தெற்கு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கருப்பையா(62). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் 50ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளைத் திருடியுள்ளார். அதன் பின்னர் வாசலில் நின்றுகொண்டிருந்த கருப்பையாவின் காரை பயன்படுத்தித் தப்பிச் சென்றுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மறுநாள் காலை கருப்பையாவுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கருப்பையா பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் தேவசகாயமேரி தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கருப்பையாவின் செல்போனுக்கு பாஸ் டேக் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

 

அதில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கருப்பையாவின் கார் கடந்து இருப்பதாக பாஸ்டேக் விவரங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்டு உஷாரான கருப்பையா உடனடியாக பீர்க்கன்கரணை காவலர்களுக்குத் தகவல் அளித்தார். விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் கருப்பையாவின் கார் பதிவெண்ணை விக்கிரவாண்டியை அடுத்துள்ள சுங்கச் சாவடிகளுக்குத் தெரிவித்துள்ளனர். விக்கிரவாண்டி டோல்கேட்டை தாண்டியதும் கொள்ளையன் உஷாராகி பாஸ்டேக் ஸ்டிக்கரை கிழித்து எறிந்துள்ளான். கார் பதிவெண்ணை வைத்துப் பிடிக்க முயன்ற காவலர்கள் அதற்காக ஆங்காங்கே தடுப்புகள் அமைத்துச் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளையன் தடுப்புகளை மோதி தப்பிச் சென்றுள்ளார்.  அதன்பின்பு சமயபுரத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடி அருகில் கொள்ளையனின் காரை மடக்கிப் பிடிப்பதற்காகச் சாலையில் வாகனங்களை நிறுத்தி காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

 

காவலர்களைக் கண்டதும் காரை நிறுத்துவிட்டுத் தப்பி கொள்ளையன் சென்றுள்ளார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் கொள்ளையனை சுமார் 2கிலோமீட்டர் தூரம் வரைக்குச் சென்று மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து பீர்க்கன்கரணை காவலர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து கொள்ளையனைப் பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் திருட்டில் ஈடுபட்டது 19வயது மதிக்கத்தக்க வினோத்குமார் என்பதும் அவர் சென்னை படப்பை கரசங்காய் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. வினோத்குமாரைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 15ஆயிரம் ரொக்கப்பணம், 2மோதிரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த திருட்டில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது கூட்டாளிகள் யாரேனும் உள்ளனரா? எனத் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். அதே போல் திருட்டில் ஈடுபட்ட இளைஞனைப் பிடிப்பதற்கு விரைந்து செயல்பட்ட காவல்துறையினருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வனப்பகுதி ஓரத்தில் கிடந்த சாக்கு மூட்டை; அதிர்ந்த போலீசார்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Human bones in a sack lying on the edge of the forest; Police investigation

தாளவாடி அருகே வனப்பகுதி ஓரத்தில் சாக்கு மூட்டையில் மனித எலும்புகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலைமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாப்புரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுபற்றி உடனடியாக தாளவாடி காவல்துறைக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது.

மனித எலும்பைக் கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த மனித எலும்புகள் யாருடையது? யாராவது கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் தாளவாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தலையணையால் அமுக்கி மூதாட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Old woman incident by pillow; Police investigation

திருப்பத்தூரில் தலையணையால் அமுக்கி மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பலப்பல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி அனுமக்கா (82). கோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மூதாட்டி அனுமக்கா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி நேற்று இரவு வழக்கம் போல் தூங்கச் சென்றவர் காலையில் வீட்டில் இருந்து வெளியில் வராததால் அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் சென்று பார்த்த போது, மூதாட்டி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தலையணை அமுக்கி வைக்கப்பட்டு இறந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆலங்காயம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மற்றும்  வேலூர் சாரா மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றவியல் போலீசார் மற்றும் ஆலங்காயம் காவல்துறையினர் தடயங்களைக் கைப்பற்றி சந்தேகத்தின் பேரில் மூதாட்டியின் உறவினர்கள் ஆறு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து கைரேகை பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி 4 சவரன் நகைகள் அணிந்திருந்ததாக கூறப்படும் நிலையில் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என இரு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆலங்காயம் அருகே மூதாட்டி தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.