Skip to main content

பயங்கரவாதமும் ஊழலும் கட்டுப்படுத்தப்படும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

சுதந்திரப் போரட்ட வீரரான அழகு முத்துக்கோனின் குரு பூஜை விழா இன்று தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. சமூகத் தலைவர்கள், மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அங்கு வந்து அவரது சிலைக்கு மாலை மரியாதை செலுத்தினர்.

pon

 

 

 

பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் இன்று கட்டாலங்குளத்தில் நடந்த அழகு முத்துக்கோன் குரு பூஜையில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தியவர் நெல்லை வந்தவர் பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசுகையில்,

 

 

 

ஊழலும், பயங்கரவாதமும் இருப்பதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான நடடிக்கைகளை எடுத்து வருகிறது. அவை விரைவில் கட்டுப்படுத்தப்படும். சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு பா.ஜ.க. என்றுமே உரிய மரியாதை செலுத்துவதில் தவறியதில்லை. தற்போது சுதந்திரப் போராட்டத் தியாகியான கட்டாலங்குளம் அழகு முத்துக்கோனுக்கும் மரியாதை செலுத்தி வருகிறோம். இதே போன்று ஒண்டிவீரன், வீரபாண்டிய கட்டபொம்மன் வ.உ.சி. போன்ற, அனைத்து சுதந்திரப் போராட்டத் தியாகிகளை அவர்களின் விழாக்களின் போதும் உரிய மரியாதை செலுத்திக் கௌரவிப்போம். என்றார் பேட்டியின் போது தமிழக மக்கள் கல்வி இயக்கக் கழகத்தின் தலைவரான தேவநாதன்யாதவ் உடனிருந்தார்.

சார்ந்த செய்திகள்