Skip to main content

தமிழகத்தில் 2 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு!!! -இதுவரை இல்லாத அளவிற்கு பிற மாவட்டங்களில் பாதிப்பு!!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020
tamilnadu:corona impacts on other districts

 

 

தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 43,548 பேருக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டதில், இந்த எண்ணிக்கை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு பிறகு நேற்று நான்காயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்த கரோனா பாதிப்பு, தற்பொழுது இன்றும் தொடர்ந்து நான்காயிரம் என்ற எண்ணிக்கையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,140 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பத்தாவது நாளாக இரண்டாயிரத்திற்கும் குறைவாக கரோனா பதிவாகி உள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

சென்னையில் மட்டும் இதுவரை 78,573 பேருக்கு கரோனா  இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இதுவரை 1,42,798 பேருக்கு கரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவமனைகளில் 48,196 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

tamilnadu:corona impacts on other districts

 

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 3,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 92,567 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையைவிட குணமடைவோர் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்று  தமிழகத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 50 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 16 பேரும் இறந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை என்பது 2,032 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

சென்னையில் மட்டும் அதிகபட்சமாக இதுவரை 1,277 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். 44வது நாளாக தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை என்பது இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 165 பேரும், திருவள்ளூரில் 129 பேரும், காஞ்சிபுரத்தில் 52 பேரும், மதுரையில் 120 பேரும், இராமநாதபுரத்தில் 38 பேரும், திருவண்ணாமலையில் 23 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இதுவரை 755 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

 

பிற மாவட்டங்களில் இன்று மூவாயிரத்தை கடந்து கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,188 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் அதிகபட்சமாக 464 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 352, திருவள்ளூரில் 337, செங்கல்பட்டில் 219, விழுப்புரத்தில் 143, தேனியில் 134, வேலூரில் 119, ராணிப்பேட்டையில் 126, தூத்துக்குடி 122, கன்னியாகுமரியில் 185, நெல்லையில் 118, சேலத்தில் 101, திருச்சியில் 92, திருவண்ணாமலை 83, திருவாரூர் 59 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.