Skip to main content

பெண்கள் பாதுகாப்பிற்காக பிரத்யேக உதவி எண்ணை அறிமுகப்படுத்திய காவல் கண்காணிப்பாளர்!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

Superintendent of Police introduces special helpline for women's safety

 

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன். இவர் பெண்கள், சிறுமிகள் சம்பந்தப்பட்ட புகார்களை உடனுக்குடன் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக தனி உதவி எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளார். அதற்கு பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் விருத்தாசலம் அருகில் உள்ள கோ.மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த திருமணத்திற்கு அந்த சிறுமி சம்மதிக்கவில்லை கட்டாயத்தின் பெயரில் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. இது குறித்து லேடிஸ் பஸ்ட் காவல்துறை எண்ணுக்கு அந்த சிறுமி புகார் அளித்துள்ளார்.

 

அதைக் கண்காணித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கம்மாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் டைமன் துரை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அந்த சிறுமியின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு விசாரணை நடத்தியதில் 18 வயது பூர்த்தி அடையாத அந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோரிடம் உரிய வயது வருவதற்குள் சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று அறிவுறுத்தினார்கள். மீறி திருமணம் நடந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

 

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருமண வயது வந்த பிறகு திருமணத்தை நடத்துகிறோம் தற்போதைக்கு திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளனர். அதேபோன்று பரிபூரணம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் தனது கணவர் சந்திரமோகன் தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்துவதும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருவதாகவும் லேடிஸ் பஸ்ட் எண்ணுக்கு புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் ஒரத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் ராஜலட்சுமி வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் ராஜலட்சுமியின் கணவன் சந்திர மோகன் அவரது மனைவியை அடித்துத் துன்புறுத்தி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய விஷயம் உண்மை என தெரியவந்தது.

 

மேலும் சந்திரமோகனின் பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த பாரதி அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஆபாசமாக பேசி பாரதியை திட்டுவதாகவும் அடிக்கடி அவரிடம் தகராறு பிரச்சனை செய்து வருவதாக புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் பாரதி கூறியது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரரை அழைத்து எச்சரிக்கை செய்தனர். பாரதியிடம் இனிமேல் எந்த பிரச்சனை தகராறு செய்யக்கூடாது பிரச்சனை செய்தால் உங்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததோடு தகுந்த அறிவுரை வழங்கினார்கள்.

 

அவரும் இனிமேல் அங்கு போக மாட்டேன் என்று உறுதி அளித்துள்ளார். இதேபோன்று லேடிஸ் பஸ்ட் உதவி எண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் மட்டும் 52 புகார்கள் வந்துள்ளது. அவற்றில் ஆறு புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 புகார்களுக்கு சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து புகார்களுக்கும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸார் நேரில் சென்று உரிய விசாரணை நடத்தி தீர்வு கண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். பெண்கள் சிறுமிகள் தங்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களுக்கு எந்த நேரத்திலும் கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் வெளியிட்டுள்ள லேடிஸ் பஸ்ட் எண்ணுக்கு புகார் செய்து தீர்வு காணலாம் என்ற நம்பிக்கை பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.