Skip to main content

இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவரின் உடல் நாளை வருகை!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

sri lanka navy tamilnadu fisherman incident

 

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த அக்டோபர் 17- ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் ராஜ்கிரண் என்ற மீனவர் படகை ஆழ்கடலில் இலங்கை கடற்படை மோதி படகை மூழ்கடித்தது. சில மீனவர்கள் உயிர் தப்பினர். எனினும், ராஜ்கிரண் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

 

இந்த நிலையில், உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் உடலையும் அந்த படகில் பிழைப்பிற்காக மீன் பிடிக்கச் சென்று போது இலங்கை கடற்படை கப்பல் மோதி மீனவர்  படகை மூழ்கடித்து, அதிலிருந்து சிறை பிடிக்கப்பட்டுள்ள மற்ற இரு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து மூன்று நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் ராஜ்கிரண் உடல் இலங்கையிலிருந்து இன்று வியாழக்கிழமை கொண்டு வரப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று அவரது உடல் அனுப்பப்படவில்லை. அதனால் நாளை வெள்ளிக்கிழமை காலை ராஜ்கிரண் உடல் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் கூறப்பட்டுள்ளது. 

 

இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் ராஜ்கிரண் உடலை பெற்றுக் கொள்வதற்காக இரண்டு படகுகளில் மீனவர்கள் அதிகாலை சர்வதேச கடல் எல்லைக்கு செல்ல ஆயத்தமாகி உள்ளனர். நாளை மதியம் ராஜ்கிரண் உடல் கோட்டைபட்டினம் கடற்கரைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் ராஜ்கிரண் உடலோடு சிறை பிடிக்கப்பட்டுள்ள மற்ற இரு மீனவர்களையும் ஒப்படைக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.