Skip to main content

அரிசி மற்றும் சாராயம் கடத்துவதை தடுக்காத அரசை கண்டித்து இளைஞர்கள் உண்ணாவிரதம்.

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அண்ணா நகர் என்ற பகுதியில் கண்காணிப்பு கேமரா உடன் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் காவலர்கள் யாரும் பணியில் இருப்பதில்லை என்றும் தொடர்ந்து வாணியம்பாடி சுற்றியுள்ள பகுதியில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக பல புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் சோதனை சாவடி அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 Smuggling rice and booze not take action in govt and police youngsters fasting strike


கடத்தல் தொடர்பாக புகார் கூறினால், காவலர்கள் சிலர் இது பற்றி கடத்தல் கும்பலிடம் துப்பு சொன்னவர்களை பற்றி தகவல் கூறுவதாக இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்