Skip to main content

3 பேரின் உயிரை பறித்த சிறிய கவனக்குறைவு... வாடகை வீடு ஷிப்டிங் பொழுது நிகழ்ந்த சோகம்!

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

The small carelessness that separated the lives of 3 people... Tragedy happened while shifting the rented house!

 

வீட்டிலிருந்த பொருட்களை மற்றொரு வீட்டுக்கு மாற்றும்போது ஏற்பட்ட மிகச்சிறிய கவனக்குறைவு மூன்று பேரின் உயிரையே பலி கொண்டுள்ளது. அப்படிப்பட்ட சோக சம்பவம் ஒன்று தர்மபுரி அருகே நடந்துள்ளது.

 

தர்மபுரி மாவட்டம் சந்தைப்பேட்டை ரோட்டில் பச்சையப்பன் என்பவருக்கு சொந்தமாக வீடு ஒன்று இருந்தது. வீட்டின் இரண்டாவது மாடியில் இலியாஸ் என்ற நபர் குடும்பத்துடன் வசித்து வந்தார். வீட்டு உரிமையாளரான பச்சையப்பனின் மூத்த மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதால் வாடகைக்கு இருக்கும் இலியாசை வேறு வீட்டிற்கு செல்ல வீட்டின் உரிமையாளர் பச்சையப்பன் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இலியாஸ் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கோல்டன் தெருவில் உள்ள வேறு ஒரு வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

 

வீட்டிலிருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இதற்காக எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த பொருட்களை வேறு வீட்டிற்கு மாற்றும் பணியில் இலியாஸ் ஈடுபட்டிருந்தபோது அதற்காக உதவும் நோக்கில் வீட்டு உரிமையாளர் பச்சையப்பன், கோபி, குமார் ஆகியோர் உதவி புரிந்துள்ளனர். பேக் செய்யப்பட்ட சிறிய பொருட்களை வண்டியில் ஏற்றியவுடன் பெரிய பொருட்களான பீரோ உள்ளிட்டவற்றை இரண்டாவது மாடியில் மேல்மாடத்திலிருந்து கயிறு மூலம் கட்டி கீழே இறக்க நால்வரும் திட்டமிட்டனர். திட்டமிட்டபடி பீரோவை இறக்கிக் கொண்டிருந்த பொழுது, வீட்டிற்கு வெளியே உயர் மின்னழுத்த கம்பியில் பீரோ பட்டதால் மின்சாரம் தாக்கியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் இலியாஸ், கோபி, பச்சையப்பன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கவலைக்கிடமான நிலையில் குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூவரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கவனக்குறைவால் ஏற்பட்ட மூன்று பேரின் உயிரிழப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.