Skip to main content

ஐந்து கிராம மக்களின் குடிநீர் தேவையை போக்கும் ஒற்றை கை பம்பு; வரிசைகட்டி நிற்கும் மக்கள் வேதனை

Published on 05/05/2019 | Edited on 05/05/2019

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பன்மடங்காக அதிகரித்துள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் மக்களை வாட்டியெடுத்துவருகிறது. தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்து ஆடத்துவங்கிவிட்டது.

 

village

 

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களும் குடிநீர் பிரச்சினையால் அல்லல்படுகின்றனர். மாநகராட்சி, நகராட்சிகளில் குடிநீர் லாரிகள் மூலம் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் உள்ளனர்.

 

ஆனால் கிராமபுறங்களோ உள்ளாட்சி அமைப்புகள் இல்லாமல்போனதால் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளையும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

 

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம்  வேப்பத்தாங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் மக்களை பெருத்த அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. ஊராட்சி முழுவதும் உள்ள மக்களின் குடிநீர் தேவையை ஒரே ஒரு அடிபம்பு மட்டுமே தீர்த்து வைக்கிறது. மற்ற இடங்களில் உள்ள கை பம்புகளை பரிமாறிக்க ஆளிள்ளாமல் பாழடைந்து கிடக்கிறது.

 

அதோடு வேப்பத்தாங்குடியை சுற்றியுள்ள கிராமங்களான வஞ்சியூர், படுவைக்காடு, மாவூர், வயலுர், பரமாக்குடி உள்ளிட்ட  கிராமங்களில் உள்ள இந்த ஒற்றை அடிபம்பை மட்டுமே நம்பி உள்ளனர்.

 

"சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் வசதி இல்லாததால் ஒரு குடம் தண்ணீர் எடுக்க 2 கிலோ மீட்டர் தூரம் போகவேண்டியிருக்கு. மேலும் சாலை வசதி இல்லாததால் தடுமாறி விழுந்து காயப்படுவதோடு, எடுத்து வரும் தண்ணீரும் கீழே கொட்டி விடுகிறது ". என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

 

 

" வேலைக்கு செல்லும் ஆண்களும், சிறுவர்களும், பெண்களும் என அனைவரும் ஒரு குடம் தண்ணீர்க்காக தங்கள் வேலையை விட்டுவிட்டு தண்ணீருக்காக அலைகின்றனர்.

 

 

ஐந்து கிராம மக்களின் தாகத்தை இந்த ஒற்றை அடிபம்பு தணித்தாலும், தற்போது கோடை மழையும் இல்லாமல் போனதும், வெயிலின் தாக்கமும் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவருகிறது. 

 

நாங்களாகவே போர் வசதிகள் செய்தாலும் நிலத்தடி நீர் உப்பாக இருக்கிறது, எங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்துவிட்டோம் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான ஒன்றான குடிநீர் தேவையை தமிழக அரசு பூர்த்திசெய்ய ஏற்பாடு செய்துதர வேண்டும். என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை இளவரசியைக் காணச் சென்ற முதல்வர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
The Chief Minister is coming to see the summer princess with sentiment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் பகுதியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கோடை இளவரசியான கொடைக்கானலை காண வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், கோடை வெயிலை தணிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலத்தீவு செல்வதாக இருந்தது. ஆனால், திடீரென அதை ரத்து செய்துவிட்டு கோடை இளவரசி கொடைக்கானலை காண முடிவு செய்தார். அதன் அடிப்படையில், இன்று காலை 29ம்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்ட முதல்வர் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானலில் உள்ள பாம்பார்புரத்தில் இருக்கும் தயாரா ஸ்டார் ஹோட்டலில் மே 4ஆம் தேதி வரை தங்க இருக்கிறார். 

முதல்வர் கொடைக்கானல் வருகையை ஒட்டி கொடைக்கானல் மூஞ்சி கல்லிலிருந்து பாம்பார்புரம் வரும் வரை சாலைகள் பேண்டேஜ் ஒர்க் பார்க்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து, இன்று காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரை வத்தலக்குண்டு காட் ரோடு வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு கொடைக்கானல் மலைப்பகுதியில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவிட்டுள்ளார். அதுபோல், முதல்வர் பாதுகாப்புக்காக எஸ்.பி தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பி, 2 டி.எஸ்.பி, ரெண்டு இன்ஸ்பெக்டர், பத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

The Chief Minister is coming to see the summer princess with sentiment

கடந்த 2019ல் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே முதன் முதலில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தவர், அங்குள்ள கால்டன் ஹோட்டலில் ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு சென்றார். அதன் பின், பாராளுமன்றத் தேர்தல் முடிவில் 40க்கு 39 தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அதேபோல் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே கொடைக்கானல் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பம்பார்புரம் தமாரா ஸ்டார் ஓட்டலில் தங்கி விட்டு சென்ற பின்பு தான் நூற்றுக்கு மேற்பட்ட சீட்டுகள் வாங்கியதன் பெயரில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் இருக்கும் சூழ்நிலையில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். 

பாம்பாராபுரத்தில் தங்கிய தமாரா ஹோட்டலில் ஒரு வாரம் குடும்பத்தாருடன் தங்கி ஓய்வெடுக்க இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் யாரையும் முதல்வர் சந்திக்க விரும்பவில்லை. ஆனால், அரசியல் ரீதியாக மந்திரி சபை மாற்றம் மற்றும் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதற்கான ஆலோசனையும் குடும்பத்தாருடன் பேசி முதல்வர் முடிவெடுக்க இருக்கிறார் என்ற பேச்சும் இருந்து வருகிறது. இப்படி சென்டிமென்ட் மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலையும் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியை ரசித்து விட்டு செல்வது போலத்தான் தற்பொழுதும் கோடை இளவரசியைக் காண கொடைக்கானல் வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, முதல்வர் வருகையையொட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.          

Next Story

முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Chief Minister M.K. Stalin trip to Kodaikanal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இந்நிலையில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.