Skip to main content

பழிக்கு பழி அடுத்தடுத்து கொலை!!! நாகை பரபரப்பு...

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

series of incidents in nagapattinam district

 

சில மாதங்களுக்கு முன்பு பஞ்சர் கடை உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதற்கு பழி தீர்க்க, அவரை கொலை செய்யக் கூலிப்படையினருக்கு திட்டம் தீட்டிக் கொடுத்ததாக, 19 வயது இளைஞரை வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம், நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

 

நாகை அடுத்த மேல வாஞ்சூரில் பஞ்சர் கடை நடத்தி வந்த செந்தில், நரிமனம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். செந்திலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அகத்தியன் என்பவரது குடும்பத்திற்கும் நீண்ட நாள்களாக, ஊரில் யார் பெரிய ஆள் என்கிற பகை மூண்டபடியே இருந்துவந்ததுள்ளது.

 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அகத்தியனின் தம்பி கதிர், வாஞ்சூர் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, கொலை செய்ய செந்தில் தரப்பு முயற்சித்தப்போது, அதில் கதிர் தப்பித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பிற்குமான பகை மேலும் அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, வாஞ்சூரில் அகத்தியனின் மகன் தினேஷைக்  கொலை செய்யத் திட்டமிட்டு, மர்மநபர்கள் சிலர் விரட்டியதாக நாகூர் காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்தார். புகாரை விசாரித்த நாகூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிடப்பில் போட்டுள்ளனர்.

 

இதற்கிடையில் 20 நாட்களுக்கு முன்பு வாஞ்சூர் பகுதியில் உள்ள குளத்திற்கான மீன்குத்தகை நடைபெற்றுள்ளது. வழக்கமாக குளத்தை குத்தகைக்கு எடுத்துவந்த அகத்தியனுக்கு நெருக்கடி தரும் வகையிலும், இந்த முறை குளத்தின் குத்தகையைத் தன்வசப்படுத்தும் நோக்கத்துடன் ஏலத்தொகையை அதிகரித்தபடியே கேட்டு வந்துள்ளார். 20,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கவேண்டிய குளத்தை சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஏற்றி விட்டிருக்கிறார் செந்தில்.

 

கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அகத்தியன் செந்திலைக் கொலை செய்யக் கூலிப்படை மூலம் நோட்டமிட்டு, பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து கோபத்தை தீர்த்துக்கொண்டனர். அதன்பின் அகத்தியனும், அவரது மகன் தினேஷ், உறவினர்கள் செல்வம், மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேரும் தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் எண் 2 இல் சரண் அடைந்தனர். 

 

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த செந்திலின் இறுதி சடங்குகள் நடந்த நாகூர் அடுத்துள்ள பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கிற்கு பின்புறம் உள்ள இடத்தில், 19 வயதுடைய இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக நாகூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற நாகை டி.எஸ்.பி. முருகவேல் உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். உயிரிழந்த இளைஞர் மேலவாஞ்சூர் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்பதும், செந்தில் கொலை வழக்கில் முக்கிய புள்ளியான அகத்தியனின் வீட்டில் வாடைக்கு குடியிருந்தவர் என்பதும் தெரிய வந்தது. சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அசாருதீன் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது பனங்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த விஜயகுமார் மற்றும் பனங்குடி சண்ணமங்கலத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவரும் அதிகமாக பேசியிருப்பதை கண்டுபிடித்தனர். அதன்பின் இருவரையும் சந்தேகத்துடன் தேடி வந்தனர். 

 

இந்தநிலையில் பனங்குடி கிராம நிர்வாக அலுவலர் உமா முன்னிலையில், அஜித்குமார் சரண் அடைந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அஜித்தை கைதுசெய்த காவல்துறையினர் விசாரனை நடத்தியபோது, இரண்டுபேரும் இணைந்து அசாருதினை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் கொட்டாரக்குடி பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த விஜயகுமாரை கைது செய்தனர்.

 

‘செந்திலைக் கொலை செய்ய வந்த கூலிப்படைக்கு திட்டம் தீட்டிக் கொடுத்து, செந்திலைப் பின் தொடர்ந்து வந்து தகவல் கொடுத்ததும் அசாருதீன்தான் என்று தெரிய வந்துள்ளது. இதனால்தான் அசாருதீனைக் கொலை செய்தோம்’ என்று விஜயகுமாரும், அஜித்குமாரும் விசாரணையில் கூறியிருக்கின்றனர். நாகையில் பழிக்குப்பழியாக இரண்டு கொலைகள் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.