Skip to main content

5 டன் செப்பேட்டில் பன்னிருத் திருமுறை புத்தகத்தில் மூலவர்; ரூ.10 கோடியில் உருவாகும் செப்பேட்டுக் கோயில்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Sempet Temple will be built at Rs. 10 crores

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் உள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க கிராமம் கொடும்பாளூர். பழைய வரலாற்றுக் காலத்தில் தொடர்புடைய பொத்தப்பட்டி கிராமத்தில் விருத்தாச்சலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் "பன்னிருத் திருமுறை செப்பேட்டுத் திருக்கோயில்" கருங்கல்லால் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் செப்பேட்டுத் திருக்கோயில் என்று கூறப்படுவதால் அதனைப் பற்றி அறிய பொத்தப்பட்டி கிராமத்தில் கோயில் திருப்பணிகள் நடக்கும் இடத்திற்குச் சென்றோம்.

Sempet Temple will be built at Rs. 10 crores

திருப்பணிகளைக் கண்காணித்து வரும் அறக்கட்டளை நிறுவனர் அ.சங்கரய்யா நம்மிடம், “விருத்தாச்சலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை சார்பில் நாயன்மார்களுக்கு கோயில்கள் கட்டி எழுப்பி வருகிறோம். அந்த வகையில் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் 12 திருமுறைகளுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் கோயில் கட்ட முடிவெடுத்து பொத்தப்பட்டி கிராமத்தில் நிலம் வாங்கி கருங்கல்லால் கோயில் கட்டி வருகிறோம். இதில் திருமுறைகளுக்கு உதவிய மன்னர் ராஜராஜசோழன் காளிங்கராயர், பாடியவர் சிலைகளும், திருமுறைகளும் வடிக்கப்படுவதுடன் திருப்பணிக்கு உதவியோர்களின் சிலைகளும் வடிக்கப்படுகிறது. எங்கே பார்த்தாலும் நம் பழைய இசைக்கருவிகள் புடைப்புச் சிற்பங்களும், திருமுறை வாசகங்களும் இடம் பெறுகிறது.

Sempet Temple will be built at Rs. 10 crores

அதைவிட சிறப்பு கோயில் கருவறையில் இதுவரை சிலைகள் வைக்கப்படும். ஆனால் இங்கே 12 திருமுறைகளையும் 5 டன் செம்பு பட்டயத்தில் திருமுறைப் பாடல்களை அச்சிட்டு 165 புத்தகங்களாக்கி கருவறையில் லிங்கம் வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு லிங்கம் போன்ற அமைப்பில் கவசம் அணிவிக்கப்பட உள்ளது. இந்தச் செம்பு திருமுறைப் புத்தகங்களை ஆனி திருமஞ்சனம், ஆருத்ர தரிசனம் ஆகிய இரு நாட்களில் மட்டும் வெளியில் எடுத்து படிக்க கொடுக்கப்படும். ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்க 165 இருக்கைகள் அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் 165 பேரும் பாட நிரந்தர மண்டபமும் தயாராகிறது. இதே ஊரில் செப்பு பட்டயத்தில் திருமுறை பாடல்கள் அச்சாக்கப்பணிகளும் நடந்து வருகிறது.

உலகிலேயே பன்னிருத் திருமுறை செப்புப் புத்தகத்தால் ஆன கோயில் இது மட்டுமே இருக்கும். இந்தக் கோயிலும் வரலாற்றில் பேசப்படும். இதற்கான திருப்பணி நன்கொடைகள் கிடைத்தால் இன்னும் விரைவாக பணிகள் முடிந்து திருக்குட நனனீராட்டு பெருவிழா நடத்திவிடலாம்" என்றார். திருமுறை புத்தகங்களே மூலவராக இருப்பது தமிழுக்கே உரிய சிறப்பு என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

போட்டித் தேர்வர்களுக்கு உதவும் மாற்றுத்திறனாளி ஆசிரியரின் நெகிழ்ச்சி செயல்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Visually Impaired Teacher's Resilience Act Helps Competitive Exams

வயிற்றுப் பசியைப் போக்க நல்ல உணவு கிடைக்கிறது. நம் அறிவுப் பசியைப் போக்க நல்ல நல்ல புத்தகங்களும் கிடைக்கிறது. ஆனால் பார்வை மாற்றுத்திறனாளியான நமக்கு (பிரைலி) பாடப் புத்தகங்கள் மற்ற நல்ல புத்தகங்களை வாசிக்கும் வசதிகள் கிடைக்கவில்லையே! என்ற ஏக்கம் கல்லூரி மாணவரான பொன்.சக்திவேலுக்கு ஏற்பட்டது. ஒரு நாள் வகுப்புகளுக்குப் போகவில்லை என்றாலும் அந்தப் பாடத்தை அறிந்து கொள்ள முடியாத நிலை. நடத்தும் பாடத்தைக் கூட மறுபடி படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் ஒரு சிறிய ஆடியோ ரெக்கார்டரை வாங்கி ஆசிரியருக்கே தெரியாமல் பதிவு செய்து விடுதியில் வந்து அதைத் திருப்பிக் கேட்கத் தொடங்கினார்.

இந்த முறை நல்லா இருக்கிறதே என்று நினைத்தார். அப்போது தான் கூகுள் எழுத்துணரியாக்கத்தை அறிமுகம் செய்தது. ஆய்வு நிறைஞர், முனைவர் பட்டத்திற்கான தேடல்களுக்கு எழுத்துணரியாக்கம் கை கொடுத்தது. இதற்காக நவீன ஸ்கேனர் வாங்கி நண்பர் உதவியுடன் அதனைப் பயன்படுத்தித் தான் விரும்பும் புத்தகங்களை வாங்கி ஸ்கேன் செய்து குரல் மொழியாக மாற்றி அதனை அறிந்து கொண்டார். நவீன இலக்கியங்கள், வரலாறு, அறிவியல் என ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து தன் அறிவுப் பசியை போக்கினார். 

Visually Impaired Teacher's Resilience Act Helps Competitive Exams

தான் மட்டும் அறிந்து கொள்வது மட்டும் போதாது தன்னைப் போல உள்ள மற்றவர்களும் படிக்க வேண்டும் என்பதை உணர்ந்த சிலட்டூர் அரசுப் பள்ளி தமிழாசிரியர் பொன்.சக்திவேல் ஒரு வாட்ஸ் அப் குழு தொடங்கி தன்னைப் போலப் புத்தக தேடல்களில் இருக்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளை ஒன்றிணைத்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை மின்னூலாக்கிக் கொடுத்து வருகிறார். இதுவரை சுமார் ஆயிரக்கணக்கான 10 லட்சம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களை மின்னூலாக்கிக் கொடுத்திருக்கிறார். இதனால் பலர் ஆய்வுப் படிப்புகள் முதல் போட்டித் தேர்வுகளுக்கான படிப்புகள் வரை படித்து வருவதுடன் இலக்கியங்களையும் படித்துப் பயனடைந்து வருகின்றனர்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி சண்முகநாதபுரம் பொன்.சக்திவேல் (சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர்) நம்மிடம் பேசுகையில், “பார்வை மாற்றுத்திறனாளிகள் படிப்பதற்கும் படித்ததை மறுபடி படித்துப் பார்க்கவும் சிரமப்படுகிறோம். வகுப்பறையில் இலக்கியங்கள், வரலாறுகள் நடத்தும் போது அதை முழுமையாக நாம் படிக்க வேண்டும் என்ற ஆசை வரும். ஆனால் சராசரியான புத்தகங்களை நம்மால் படிக்க முடிவதில்லை. இது போல நானும் பாதிக்கப்பட்டேன். அதனால் தான் நாம் விரும்பிய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் முனைவர் பட்டத்திற்காகப் படிக்கும் போது நிமிடத்திற்கு 160 பக்கம் ஸ்கேன் செய்யும் ஸ்கேனர் வாங்கினேன். அதில் புத்தக பைண்டிங்களை பிரித்து வைத்தால் வேகமாக ஸ்கேன் செய்யும். அப்படியே எழுத்துணரியாக்கம் செய்து கொள்ள 1000 பக்கத்தை அரை மணி நேரத்தில் குரல் மொழியாக்கிவிட முடிகிறது. 

Visually Impaired Teacher's Resilience Act Helps Competitive Exams

நம்மைப் போல மற்றவர்களும் படிக்க வேண்டும் என்று ஒரு வாட்ஸ் அப் குழு தொடங்கி விருப்பம் கேட்டேன். தற்போது வரை 34 பேர் இணைந்திருக்கிறார்கள். சென்னை, மதுரை, கோவை என எந்த ஊரில் புத்தகத் திருவிழா நடந்தாலும் ஒவ்வொரு உறுப்பினரும் படிக்க ஆசைப்படும் புத்தகங்களின் விபரங்களைச் சேகரித்து அதற்கு ஆகும் செலவுத் தொகையை அனைவரும் பங்கிட்டு புத்தகங்களை வாங்கி மின்னாக்கம் செய்து அனுப்புகிறேன்” எனத் தெரிவித்தார். இதுவரை எத்தனை புத்தகங்கள் மின்னாக்கம் செய்திருப்பீர்கள்? என்ற கேள்விக்கு, “சுமார் ஆயிரம் புத்தகங்கள். அதாவது 10 லட்சம் பக்கங்கள் மாற்றி இருக்கிறோம். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி, ஆனந்தரங்கர் நாட்குறிப்பு உள்பட அதிக பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் மின்னாக்கி படிச்சு முடிச்சாச்சு. அதே போலக் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி முதல்வர் வரை அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை எனக்கு அனுப்புவார்கள் அதனை உடனே மின்னாக்கம் செய்து கொடுக்கிறேன். கிருஷ்ணகிரி கல்லூரி முதல்வர் கண்ணன் சாருக்கு மட்டும் 200 புத்தகங்கள் மின்னாக்கம் செய்து கொடுத்திருக்கிறேன். எங்கள் வாட்ஸ் அப் குழு மூலமாக இதுவரை 6 சுற்றுகளாக சுமார் 350 புத்தகங்கள் வாங்கி மின்னாக்கம் செய்திருக்கிறோம்.

அதே போலப் போட்டித் தேர்வுகளுக்குப் பலருக்கும் இந்த மின்னாக்கம் பேருதவியாக உள்ளது. பலர் வேலை வாங்கிட்டாங்க. பலர் பதவி உயர்வுக்கும் பயன்கிடைத்திருக்கும். இன்னும் ஏராளமான ஆய்வு மாணவர்கள் படிக்க உதவியாக உள்ளது. கடந்த வாரம் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியை உதவிப் பேராசிரியர் தேர்வு படிக்கத் தேவையான புத்தகங்களை வாங்கி எனக்கு அனுப்பிவிட்டுத் தேர்வுக்குக் குறைவான நாட்களே உள்ளது சீக்கிரமாக மின்னூலாக்கி அனுப்புங்கள் என்றார். மாலை 4 மணிக்கு வந்த புத்தகங்களை இரவு 9 மணிக்குள் 2500 பக்கங்களையும் ஸ்கேன் செய்து மின்னூலாக்கி அனுப்பிட்டேன். அதைப் பார்த்த அந்த ஆசிரியைக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தேர்வில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போல ஸ்கேன் செய்யப்பட்ட புத்தகங்களைக் குரல் மொழியாக்குவது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் அந்த புத்தகங்களை எளிமையாக பிரைலி எழுத்து புத்தகங்களாக மாற்றி எப்போதும் வைத்திருந்து படித்துப் பாதுகாக்க முடிகிறது. இப்போது நூலகங்களில் மின்னாக்க நூல்களை வைக்க முதலமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். 

Next Story

போலீசார் தாக்கியதால் காயம்; மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு 

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Ordered to submit medical report of Pandian who was injured  by police

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் சரகத்தில் கடந்த மாதம் 9 ந் தேதி ஒரு மூதாட்டியை தாக்கி நகை பறித்துச் சென்றதாக வந்த புகாரையடுத்து சந்தேக நபராக கூறப்பட்ட ரவி மகன் பாண்டியன்(18) மற்றும் அவரது 17 வயது நண்பன் ஆகியோரை 10 ந் தேதி விசாரனைக்காக அழைத்துச் சென்று 16 ந் தேதி ஆலங்குடியில் கஞ்சா விற்றதாக 17 வயது சிறுவனை ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் விடப்பட்டார்.

அதே போல 18 ந் தேதி கோட்டைப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழமஞ்சக்குடி கிராமம் கொள்ளுவயல் ஆற்றுப்பாலம் அருகே 1 கிலோ 150 கிராம்  கஞ்சாவுடன் பைக்கில் வந்த போது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் முன்னிலையில் அவர்கள் சாட்சியாக பாண்டியனை கைது செய்தனர். மேலும், பைக் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போது உடலில் காயங்களுடன் இருந்ததாக வாக்குமூலம் பதிவு செய்து மணமேல்குடி மருத்துவமனையில் காண்பித்து மருத்துவச் சான்று பெற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் போலீசார் தன்னை தாக்கியதால் படுகாயம் ஏற்பட்டு வலிக்கிறது என்று பாண்டியன் கதறியதால் உடனே புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு பாண்டியனின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால் டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பல நாட்கள் டயாலிசிஸ் செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்பகுதியில் உள்ள புண்களும் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாண்டியன் தரப்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் போலீசார் தாக்கியதில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு பாண்டியனுக்கு தனியார் மருத்துவமனையில் அரசு செலவில் உயர் சிகிச்சை அளிக்கவும், மாற்று விசாரணை கேட்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு வெள்ளிக்கிழமை(5.7.2024) விசாரணைக்கு வந்த நிலையில் பாண்டியனின் உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் பற்றிய மருத்துவ அறிக்கையை வரும் 10 ந் தேதி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், போலீசார் தரப்பில் கவுண்டர் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.