Skip to main content

திமுக முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் மறைந்தார்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

 

தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் உடல்நலக்குறைவால் திருச்சியில் மறைந்தார்.

 

s

 

திருச்சி திமுக என்றாலே கலைஞர் காலத்தில் அன்பில் தர்மலிங்கம் தான் நினைவுக்கு வரும். அவர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்தார். அவருக்கு பின்பு திருச்சி மாவட்ட தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சராக இருந்தவர் என்.செல்வராஜ்.   இவர் பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலத்தில் 5 மே 1944 அன்று பிறந்தவர். இளம் வயது பொறியாளர். மிகுந்த நினைவாற்றல் உள்ளவர். 

 

செல்நம்பரை ஒருமுறை சொன்னால் போதும் அப்படியே மனதில் பதிந்து வைத்துக்கொள்ளுவார். இப்படி அவர் மனப்படமாக 2500க்கு மேற்பட்ட தனக்கு நெருக்கமானவர்களின் செல்போன் எண்களை நினைவில் வைத்திருப்பார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.   மேடைகளில் பேசும்போது குறிப்புகள் எதுவும் இல்லாமல் சரளமாக பேசக்கூடிய ஆற்றல் மிக்கவர்.   மேடையில் இருப்போரின் பெயர்களையும், கூட்டத்திற்கு வந்திருக்கும் முக்கியமானவர்களின் பெயர்களையும்  நினைவில் வைத்து பேசக்கூடியவர். 

 

s

 

திருச்சி மாவட்டத்தை சுற்றி உள்ள மாவட்டங்களில் முத்திரையர் இன மக்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், அந்த சமூகத்தில் செல்வாக்கான நபர் என்பதாலும் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க.விற்கு மா.செ.வாக இருந்தவர். மாநாடு நடத்தியவர் என்கிற பெருமை பெற்றவர். 

 

இவர் மாவட்ட செயலாளாராக 1987 முதல் 1993வரை இப்பதவியில் இருந்தார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக 1980–84 ஆண்டுகளில் இருந்தார். வைகோ கட்சி ஆரம்பித்த போது தி.மு.க.வை விட்டு மதிமுகவிற்கு சென்றார். இதனால் தி.மு.க. மா.செ.வாக கே.என்.நேரு நியமிக்கப்பட்டார். 

 

s

 

பின்பு மீண்டும் தி.மு.க.விற்கு வந்த செல்வராஜ் தி.மு.க சார்பில் 2006 ஆண்டு முசிறி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அ. தி. மு.க. வேட்பாளரான பூனாட்சியை 10,927 வாக்குகளில் தோற்கடித்தார். தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார். அதன் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தவர் சில காலம் அமைதியாக இருந்தார். 

 

s

 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அ.தி.முக.வில் இணைந்தவர் கட்சி செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்தார். ஜெ. மரணத்திற்கு பிறகு  உடல் நலக்குறைவால் அவருடைய மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அதன் பிறகு அவருடைய மகன் இரண்டு பேரும் திமுக. மா.செ. நேருவுடன் இணைந்து கட்சியில் பணியாற்றி வந்தனர். இந்த எம்.பி. தேர்தலுக்கு கே.என்.நேரு ஆசியுடன் பெரம்பலூர் எம்.பி. தொகுதிக்கு விருப்பமனு கொடுத்தனர் என்பது குறிப்பிட தக்கது. 

 

s

 

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு திருச்சி வந்திருந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திருச்சி தில்லைநகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உடல்நலக்குறைவால் இருந்த செல்வராஜ்-ஐ பார்த்து அவர் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். 

 

என்.செல்வராஜ் இன்று மாலை 6.15க்கு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவருக்கு இரண்டு மகன்கள் கருணைராஜா, கலைராஜ், 2 பெண்கள் மருத்துவம் படித்து இருக்கிறார்கள். அவர் மருமகன் ராஜரத்திரன் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.