Skip to main content

பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம்! - மத்திய அரசு தகவல்

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

 A second airport at Parantur!

 

சென்னை அருகே மற்றொரு விமான நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டு இருக்கும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அந்த புதிய விமான நிலையம் அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து  15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் இந்த புதிய இரண்டாவது விமான நிலையம்  அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, அதேபோல் பூர்வ குடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்