
சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட பென்னிக்ஸின் பிறந்த நாளான இன்று, "புது ஃபோட்டோ போட்டுருக்கலாம்..! காக்கா ஃபோட்டோ மாதிரி இருக்கு.!" எனச் சொன்ன பென்னிக்ஸின் வாய்ஸ் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குள காவல் நிலையத்தில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் தந்தை மகனான ஜெயராஜூம், பென்னிக்ஸூம்.! நக்கீரனின் சமூக அக்கறையால் வழக்கு சிபிஐக்கு சென்று மதுரை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று கொலையுண்ட பென்னிக்ஸின் 32- வது பிறந்த தினம் என்பதால், அவருடைய நண்பர்கள் பென்னிக்ஸின் குரலைப் பதிவிட்டு வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்தாண்டு இதே பிறந்த தினத்தில் பென்னிக்ஸின் புகைப்படத்தை தங்களுடய வாட்ஸ் அப் முகப்பில் வைத்து பெருமை சேர்த்த நண்பர்களிடம், "நன்றி.! நன்றி.! என்னன்னா..! கொஞ்சம் புது ஃபோட்டோவா போட்டுருக்கலாம்.! என்னன்னா காக்கா ஃபோட்டா மாதிரி போட்டிருக்கு" என நன்றி கூறி வாட்ஸ் அப்பில் குரல் பதிவை அனுப்பியிருந்துள்ளார் பென்னிக்ஸ். அதைப் பத்திரமாக வைத்து இன்று பென்னிக்ஸின் பிறந்த நாளில் அந்தக் குரல் பதிவை ஒலிக்க விட்டுள்ளனர் அவருடைய நண்பர்கள். இது சாத்தான்குளம் முழுமைக்கும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.