Skip to main content

காவலர்கள் மீது குவியும் புகார்கள்; அடுத்தடுத்து இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

salem police transferred to armed forces department

 

நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குச் செல்ல வழி தெரியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய இளைஞரிடம் கைப்பேசியை பறித்துக்கொண்டு, உதவி செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்ட சிறப்பு எஸ்.ஐ ஒருவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

சேலம் களரம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 34). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர், கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) நள்ளிரவு தன் வீட்டு வழியாக ஒரு மூதாட்டி தடுமாறியபடி சென்றதைப் பார்த்தார். இதுகுறித்து அவர் உடனடியாக சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து, மூதாட்டிக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார். அதன்பேரில், கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து எஸ்எஸ்ஐ கலைச்செல்வன் சம்பவ இடத்திற்குச் சென்றார். திடீரென்று அவர் பிரபாகரனிடம் இருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு, ''ஏன் இரவு நேரத்தில் தேவையில்லாமல் தொந்தரவு செய்கிறாய்? நீயே அந்த மூதாட்டியின் வீட்டைக் கண்டுபிடித்து  வீட்டில் விட்டுவிட்டு வந்துவிடு. அதன்பிறகு காவல் நிலையத்திற்கு வந்து கைப்பேசியை வாங்கிக்கொள்'' என்று அலட்சியமாகக் கூறியுள்ளார்.

 

அதற்கு பிரபாகரன், ''நானே மூதாட்டியை அவருடைய வீட்டில் சேர்த்து விடுகிறேன். ஆனால், என்னுடைய கைபேசியை கொடுத்து விடுங்கள்'' என்று கேட்டுள்ளார். அதற்கு எஸ்எஸ்ஐ கலைச்செல்வன் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, மூதாட்டியின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியாததால், விடிய விடிய பிரபாகரன் தன் சொந்த பாதுகாப்பில் மூதாட்டியை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார். மறுநாள் காலையில் பிரபாகரன், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் எஸ்எஸ்ஐ கலைச்செல்வன் மீது புகார் அளித்தார். அதன்பேரில், துணை ஆணையர் லாவண்யா விசாரணை நடத்தினார். இதற்கிடையே, காவல்துறையினர் மூதாட்டியை மீட்டு உரிய முகவரியில் சேர்த்தனர். பணி நேரத்தில், உதவி கேட்ட பொதுமக்களிடம் அலட்சியமாக நடந்து கொண்டதாலும், கடமை தவறியதாலும் எஸ்எஸ்ஐ கலைச்செல்வனை உடனடியாக மாநகர ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

இது ஒருபுறம் இருக்க, சேலம் நகர காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் சிவக்குமாரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருடைய உறவினர் ஒருவர் சேலம் கடைவீதியில் பழக்கடை வைத்துள்ளார். அவருக்கும், அருகில் பழக்கடை வைத்துள்ள மற்றொருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காவலர் சிவக்குமார் தன் உறவினரை பக்கத்துக் கடைக்காரர் எடைக்கல்லால் தாக்க முயன்றதாக காவல்துறை மேலிடத்திற்கு தவறான தகவலை கொடுத்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காவலர் சிவக்குமார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.