Skip to main content

முதல்வருக்கு ஒரு சட்டம்... எதிர்க்கட்சித் தலைவருக்கு வேறொரு சட்டமா? திமுக எம்.பி., விளாசல்!

Published on 18/04/2020 | Edited on 18/04/2020

ஊரடங்கு உத்தரவைமீறி, பலதுறை அதிகாரிகளை ஒரே இடத்தில் அழைத்து வந்து கூட்டம் நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி., பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை (ஏப். 17) நேரில் ஆலோசனை நடத்தினார்.


ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தியது விதிகளை மீறிய செயல் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக எம்பி பார்த்திபன், ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

 

SALEM DMK MP



இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:


முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 144 தடை உத்தரவு அமலில் உள்ளபோது யாருமே கூட்டம் போடக்கூடாது. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது எனும்போது, முதல்வர் மட்டும் சட்டத்தை மீறி கூட்டம் நடத்தி இருக்கிறார்.
 

 nakkheeran app



கடந்த இரு நாள்களுக்கு முன்பு, திமுக தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், ஊரடங்கை காரணம் காட்டி அக்கூட்டத்திற்கு தடை விதித்தனர். அரசியல் உள்நோக்கத்தோடு எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டத்திற்கு முதல்வர் தடை விதித்தார். இப்போது அவரே அதிகாரிகளை அழைத்து வைத்துக் கூட்டம் நடத்துகிறார். முதல்வருக்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சித் தலைவர் என்றால் வேறொரு சட்டமா?

மக்கள் நலனில் அக்கறை இருப்பதால்தான், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் அழைத்து ஆலோசிக்க தடை வந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவர் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மக்கள் நலனையும், சட்டத்தையும் மதிக்கும் முதல்வராக இருந்தால் அவரும் காணொலி மூலமே ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கலாமே?

எதிர்க்கட்சியினர் பதினோரு பேர் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கே தடை விதிக்கும் இந்த அரசு, 30 அதிகாரிகளை வரவழைத்து கூட்டம் நடத்துவது சரியானதா?. சி.ஆர்.பி.சி. 144வது பிரிவுக்கு எதிராகவும், பேரிடர் மேலாண்மை சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்பட்ட முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம், சென்னை ஆகிய மாவட்டங்கள் கரோனா வைரஸ் பரவலின் ஹாட்ஸ்பாட் ஆக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், முதல்வர் இதுபோன்ற கூட்டங்களை நடத்துவதும் சட்டத்திற்குப் புறம்பானது மட்டுமின்றி, நோய்த்தொற்றுக்கும் வழிவகுக்கும்.

இவ்வாறு பார்த்திபன் எம்பி, ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கூறினர். இது தொடர்பாக அவர்கள் சேலம் மாநகர காவல்துறை ஆணையர், நகர காவல் ஆய்வாளர் ஆகியோரிடமும் புகார் அளித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.