Published on 16/01/2019 | Edited on 16/01/2019
இலங்கை கடற்படையினர் விரட்டியதில் படகு கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் முனுசாமி குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூபாய் 5 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
படகு கவிழ்ந்து மரணமடைந்த மீனவர் முனுசாமி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இலங்கை கடற்படையின் செயல் கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுக்கும் எனவும் கூறியுள்ளார்.