Skip to main content

வெளியான காவலரின் ஆடியோ! உடனடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி! 

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

The released audio of the policeman! SP took immediate action!

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தடுக்கும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எஸ்.பி. பகலவன் எடுத்து வருகிறார். கல்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கள்ளச்சாராயம் கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்ட பகுதிகளுக்கு கடத்தப்படுவதும் காவல்துறை அவ்வப்போது ரைடு நடத்தி சாராய உற்பத்தி செய்பவர்களை கைது செய்வதும் சாராய ஊறல்களை அழிப்பதும் நடந்துவருகிறது.  

 

இந்த நிலையில் கீழ்குப்பம், சின்னசேலம் காவல் நிலைய பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், நடத்திய ரகசிய விசாரணையில் கீழ்குப்பம் காவல் நிலைய காவலர் சண்முகம் என்பவர் ஒரு சாராய வியாபாரியிடம் மாமுல் பணம் கேட்டு நேரம் பேசும் ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவலர் சண்முகத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் கீழ்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால், கள்ளக்குறிச்சிக்கும், ஆறுமுகம் என்பவரை உளுந்தூர்பேட்டைக்கும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன் கச்சராபாளையத்திற்கும், ராஜேந்திரன் என்பவரை கள்ளக்குறிச்சிக்கும், கோவிந்தராஜ் என்பவரை திருநாவலூருக்கும் பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டார். 

 

அதேபோல் சின்னசேலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி பகண்டை கூட்ரோடு காவல் நிலையத்திற்கும், தேவமூர்த்தி தேவேந்திரன் காவலர் ராபர்ட் ஜான் ஆகியோரை கள்ளக்குறிச்சிக்கும் பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார். சாராய வியாபாரியிடம் மாமூல் கேட்டு காவலர் பேரம் பேசிய சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.