Skip to main content

பணிச்சுமை காரணமா? - பொதுப்பணித்துறை என்ஜினீயர் தற்கொலை

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Public works engineer lost their Public works engineer lost their lifelife

ஈரோடு ராஜகாடு முதல் வீதியைச் சேர்ந்தவர் அங்குராஜ்(53). கோவையில் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அங்குராஜி கடந்த சில நாட்கள் முன்புதான் ஈரோடு மாவட்டம் பவானி சாகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு குடிப் பழக்கம் இருந்து வந்துள்ளது. திலகவதியும் இரண்டு மகள்களும் அவரது அம்மா வீட்டில் வசித்து வந்தனர். அங்குராஜ் மட்டும் ராஜா காடு பகுதியில் வசித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மது அருந்தச் சென்ற அங்குராஜ் அதன் பிறகு வெளியே வரவில்லை. இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் திலகவதிக்கு தகவல் தெரிவித்தனர். திலகவதி மற்றும் உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்குராஜ் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்