Skip to main content

கிராமங்களில் களைகட்டும் வீர விளையாட்டுகள்... 45 கிலோ இளவட்டக் கல்லைத் தூக்கி அசத்திய பெண்...

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

pongal sports and celebrations in thirunelveli

 

தைப் பொங்கல் தினத்தைத் தொடர்ந்து அறுவடைக்குப் பின்பு கிராமப் புறங்களில் தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் களைகட்டும். சிலம்பம், மல்யுத்தம், கபடி, கயிறு இழுத்தல், இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் என்று அன்றைய தினம் கூத்தும் பாட்டும் விளையாட்டுக்களும் தூக்கலாக இருக்கும். காண்பதற்கு அற்புதமாகவும் வித்தியாசமான அனுபவமும் கிடைக்கும். அதற்காகவே கிராமப்புறங்களில் கூட்டம் திரளுவதுண்டு.

 

முந்தைய காலங்களில் திருமணத்திற்கு பெண் கேட்டு வரும் மாப்பிள்ளை, தன் மகளை வைத்துக் காப்பாற்றுவாரா என்று சோதிப்பதற்காக அவரை 60 கிலோவிற்கும் மேற்பட்ட இளவட்டக்கல்லைத் தூக்கச் சொல்லி சோதிப்பார்கள் பெண் வீட்டார். அதில் அவர் கல்லைத் தூக்கி தோளில் வைத்து பின்புறம் தள்ளிவிட வேண்டும். அதில் அவர் வெற்றி பெற்றால் பெண். இல்லையேல் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு வந்த வழியே திரும்ப வேண்டியதுதான்.

 

காலப்போக்கில் அந்த சோதனை சம்பவம் மாறி, வீர தீர விளையாட்டுப் பட்டியலில் இடம் பெற்று விட்டது இது.

 

அந்தவகையில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை கிராமத்தில் பொங்கலையொட்டி இளைஞர் மன்றம் சார்பில் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. அதில் இளவட்டக்கல் தூக்கும் போட்டியும் இடம் பெற்றது. ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டனர். கிராமமே ஆர்வமாகத் திரண்டிருந்த விளையாட்டுப் போட்டியில் 90 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லையும் சில இளைஞர்கள் தூக்கினர். குறிப்பாக தங்கராஜ் என்பவர் 129 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லை ஏக்தம்மில் தூக்கிச் சாதனைப் புரிந்தார். முதல் பரிசையும் அவர் தட்டிச் சென்றார். 90 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லைத் தூக்கிய வாலிபர் முத்துப்பாண்டி அதை 12 முறை கழுத்தைச் சுற்றி சாகசம் புரிந்ததால் அவருக்கும் முதல் பரிசு கிடைத்தது.

 

pongal sports and celebrations in thirunelveli

 

அடுத்ததாக இளவட்டக்கல்லை ஆண்களே தூக்கும் நிலையில் பெண்ணாலும் தூக்க முடியும் என வலிமையை வெளிப்படுத்தினார் பத்மா எனும் 40 வயதுப் பெண். இவர் 45 கிலோ இளவட்டக்கல்லைத் தூக்கிப் பெண்களுக்கான முதல் பரிசைப் பெற்றார். பத்மா இளவட்டக்கல்லைத் தூக்கும் போது கிராமமே ஆர்ப்பரித்து அவருக்கு ஊக்கம் கொடுத்தது.

 

இதில் முதல் இடம் பெற்ற இளவட்டக்கல் சாதனையாளர்களுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பரிசும் கிடைத்தது. பணகுடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் திரைப்பட நடிகர் வின்ஸ்லி போன்றவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது. 

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.