Skip to main content

கர்ப்பிணியை இரும்பு ராடால் தாக்கியவர் கைது!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

Police arrested the youth who snatched the chain from the  police's wife

 

விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரத்தைச் சேர்ந்தவர் காவலர் முத்துக்குமரன். இவர், இவரது மனைவி கவியரசி மற்றும் தங்கள் குழந்தையுடன் கடந்த 8ம் தேதி காலை 11 மணியளவில் தங்கள் ஊரில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தடுப்பூசிக்கான அட்டையை (மருத்துவச் சீட்டு) வீட்டிலே மறந்து வைத்துவிட்டுக் கிளம்பியுள்ளனர்.

 

அதனால், அவர் தனது மனைவி மற்றும் குழந்தையை சாலையோரம் நிறுத்திவிட்டு தனது ஊருக்குத் தடுப்பூசி அட்டையை எடுக்கச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்று திரும்புவதற்குள் சாலையோரம் நின்றுகொண்டிருந்த அவரது கர்ப்பிணி மனைவியான கவியரசியை டூவீலரில் வந்த மர்ம நபர் ஒருவர், தலையில் இரும்பு ராடால் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த 11 சவரன் நகையைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

அந்த மர்ம நபரை பிடிப்பதற்காக டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மருது பாலசிங்கம், பாஸ்கர், பிரகாஷ், சுந்தரராஜன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், கண்ணன், ஏட்டு சீனிவாசன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்திவந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் விழுப்புரம் ஏனாதிமங்கலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மர்ம நபர் பைக்கில் வந்துள்ளார். அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியுள்ளார்.

 

அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் அவரது வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட போலீசார் அவரை அழைத்துச் சென்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அந்த நபர் நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் 39 வயதான அறிவழகன் என்பது தெரியவந்தது. இவர் தான் கவியரசியை தாக்கிவிட்டு 11 சவரன் நகையைப் பறித்துச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.

 

இதையடுத்து, அறிவழகன் போலீசாரால் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த 4 லட்சம் மதிப்புள்ள 11 சவரன் நகையை மீட்டனர். பின்னர் அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு மத்திய சிறையில் விசாரணை குற்றவாளியாக அடைத்துள்ளனர். குற்றவாளியைக் கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கடலூர், நெல்லிக்குப்பம், திருவெண்ணைநல்லூர் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரியவந்தது. ஏற்கனவே, இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.