Published on 09/06/2023 | Edited on 09/06/2023
![Placing banners without permission is punishable by imprisonment](http://image.nakkheeran.in/cdn/farfuture/LeSd5wzTjqCuB1b9IbPNNPDefHsFKRNJ9DzPlUYe62o/1686279521/sites/default/files/inline-images/1003_103.jpg)
அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பேனர்களுக்கு எதிராகப் பல அறிவிப்பை வெளியிட்டு வருகிறது அரசு. இருப்பினும் அதனைச் சிலர் மீறுவதால் தற்போது இந்த உத்தரவை நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், அனுமதியின்றி விளம்பர பேனர் அமைக்கும் தனி நபர், நிலம், கட்டட உரிமையாளர் ஆகியோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.