Skip to main content

லாரி மோதி தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

pattukottai incident... cctv footage

 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பைக்கில் வந்த இருவர் மீது லாரி மோதியதில் ஒருவர் தரதரவென இழுத்துச் செல்லப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (42). சம்பவத்தன்று அரசமாணிக்கம் என்ற உறவினரின் பைக்கில் பின்பக்கம் அமர்ந்துகொண்டு முத்துகிருஷ்ணன் சென்றுள்ளார். அப்பொழுது பைக் பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கை தாண்டி சென்றுகொண்டிருந்த பொழுது பின்னே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரியின் மக்காடில் சிக்கிய முத்துகிருஷ்ணன் சுமார் 30 அடி தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை போலீசார் முத்துகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிய நிலையில் லாரி ஓட்டுநர் முனியாண்டியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்