Skip to main content

கடன் தொல்லை... கண்டிப்பு... ஐ.டி இளைஞரின் உயிரைப்பறித்த 'ஆன்லைன் ரம்மி'

Published on 10/10/2021 | Edited on 10/10/2021

 

online rummy incident in thirupathur

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புருஷோத்தமகுப்பம் காட்டுகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

 

ஓய்வு நேரத்தில் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடிவந்துள்ளார். ஒருகட்டத்தில் பணம் கட்டி விளையாடத் தொடங்கியுள்ளார், அதில் பலலட்சம் ரூபாய் இழந்துள்ளார். நண்பர்கள், உறவினர்களிடம் பணம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.அதில் பெரியளவில் நட்டத்தை அடைந்துள்ளார். இதனால் வாங்கிய கடனை திருப்பி தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

கடன் தந்தவர்கள் பணத்தைக்கேட்டு நெருக்கடி தந்துள்ளனர். இது குடும்பத்தாருக்குத் தெரிந்து ஆனந்தனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். அப்படியும் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை விடவில்லையாம். அனைவரும் கண்டிப்பது அதிகமானது, கடன் தொல்லை போன்றவற்றால் அதிருப்தியான ஆனந்தன் அக்டோபர் 10 ஆம் தேதி மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

இதனைப்பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியாகி அழுதுள்ளனர். இதுகுறித்த தகவல் வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய காவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வாணியம்பாடி காவல்துறையினர் ஆனந்தன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து இந்த  சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி; லால்குடியில் பரபரப்பு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
A rowdy who was shooted; There is excitement in Lalgudi

பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள ஆதிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கலைப்புலி ராஜா. அந்தப் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த கலைப்புலி ராஜா மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்தப் பகுதியில் ரவுடியாகவும் வலம் வந்தார். கலைப்புலி ராஜா போலவே நவீன்குமார் என்பவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்துள்ளார்.

கலைப்புலி ராஜா மற்றும் நவீன்குமார் ஆகிய இருவர்களுக்கிடையே யார் பெரியவர் என்ற போட்டியால் அடிக்கடி மோதல் எழுதுவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து நவீன் குமாரை வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரவுடி கலைப்புலி ராஜாவைத் தேடி வந்தனர்.

இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது சிறுகனூர் பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த கலைபுலி ராஜாவை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்பொழுது பதிலுக்கு ரவுடி கலைப்புலி ராஜா போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதால் தற்காத்துக் கொள்வதற்காக காலில் சுட்டதில் பலத்த காயமடைந்த ராஜா கீழே விழுந்தார். உடனே அவரைப் பிடித்த போலீசார் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஸ்.பி வருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பிரபல ரவுடி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி லால்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

11 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை; பட்டுக்கோட்டையில் கொடூரம்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
11-year-old girl confined at home; Atrocity in pattukottai

தஞ்சாவூரில்  11 வயது சிறுமி  வீட்டில் தனியாக இருந்தபோது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில், இரண்டு இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 11 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்ததைப் பயன்படுத்தி அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாரதி, மதியழகன் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக புகாரளித்தும் முறையாக விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் சரளா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட  விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். பட்டுக்கோட்டையில் 11 வயது சிறுமி அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.