Skip to main content

தேனி மாவட்டத்தில் தொடரும் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு! ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! 

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

Occupancy of government lands in Theni district! Collector's Action!

 

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, தேனி ஆட்சியர் அலுவலகத்திற்குப் பின்புறம் உள்ள ‘வடவீரநாயக்கன்பட்டி’ பகுதியில் இருந்த அரசு புறம்போக்கு நிலங்களை 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமித்து பட்டா போட்டுக் கொடுத்திருந்தது தெரியவந்தது. இதில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளரான பெரியகுளம் மேற்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷ், தனது குடும்பத்தினர் பெயரில் பல ஏக்கர்கள் பட்டா போட்டிருப்பது தெரியவந்தது. 

 

இவற்றையெல்லாம் ஆய்வுசெய்த பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப், அதனுடைய ஆவணங்களை எல்லாம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், துறை அமைச்சருக்கும் அனுப்பிவைத்தார். அதைத் தொடர்ந்துதான் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அதிரடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் 90 ஏக்கரைக் கைப்பற்றி, அதனுடைய பட்டாவைக் கேன்சல் செய்தார். 

 

இதற்கு உடந்தையாக இருந்த 4 தாசில்தார்கள் மற்றும் மூன்று சர்வேயர்களையும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட அளவிலும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆய்வுசெய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதுபோல் அரசு புறம்போக்கு நிலங்களைப் பட்டா போட்டு வாங்கிய அதிமுக பிரமுகர் மீதும் மாவட்ட கலெக்டர்  நடவடிக்கை எடுக்க தயாராகிவந்தார். 

 

இந்த நிலையில், பெரியகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறார்கள் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஒ.பி.எஸ். மற்றும் எடப்பாடி பழனிசாமி. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Occupancy of government lands in Theni district! Collector's Action!
                                                                  முரளிதரன்

 

இந்தநிலையில்தான், கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட அளவில் அதிகாரிகள் அரசு புறம்போக்கு நிலங்களை ஆய்வுசெய்தபோது, அதே பெரியகுளம் வட்டாரத்தில் உள்ள டி.வாடிப்பட்டியில் பட்டா நிலங்களோடு அரசு புறம்போக்கு இடங்களான 56 ஏக்கரை ஆக்கிரமித்து பட்டா போட்டு, அதை கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேருக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இப்படி அரசு நிலங்களைப் பட்டா போட்டுக் கொடுத்த இடத்தில், கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேர் சோலார் பவர் பிளான்ட்டை (சூரிய மின் உற்பத்தி) போட்டிருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் அதிரடியாக அதிகாரிகள் களமிறங்கி புறம்போக்கு நிலங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.