Skip to main content

வடகிழக்கு பருவமழை;கடலூரில் ஆய்வு!!

Published on 09/10/2018 | Edited on 09/10/2018

கடலூர் மாவட்டத்தில்  வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பல்வேறு இடங்களை மாவட்ட திட்ட கண்காணிப்பாளர் ககன்தீப்சிங்பேடி ஆய்வு செய்தார்.

 

தமிழக அரசின் முதன்மை செயலாரும், வேளாண்மைத்துறை செயலாருமான ககன்தீப்சிங் பேடி, கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ. அன்புசெல்வன் முன்னிலையில் நேற்று வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் கடலூர் முதுநகர் சுத்துக்குளம் பகுதி, சிதம்பரம் அருகே  உள்ள வீரன்கோவில் திட்டு, பெராம்பட்டு, குமராட்சி அருகே  நந்திமங்கலம், வீராணம் ஏரி, காட்டுமன்னார்கோவில் பகுதி, குறிஞ்சிப்பாடி பகுதி ஆகிய இடங்களில் உள்ள நீர்நிலைகள், சாலைகள்  மற்றும் கொள்ளிடக்கரை உள்ளிட்டவைகளை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

rain

 

பின்னர் அவர் சிதம்பரம் அருகே வீரன்கோயில்திட்டு என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

 

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சரால் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்துள்ளேன். 2015ம் ஆண்டு பருவ மழையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நடப்பாண்டில் வடகிழக்கு பருமழையினால் பாதிப்பு ஏற்படா வண்ணம் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கடலூர் மாவட்டத்திற்கு  வெள்ள பாதிப்பு பணிகளுக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளோம்.

 

rain

 

விவசாயிகளுக்கு பயிர் பாதிக்கக்கூடாது என்பதற்காக பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்த்தின் கீழ் பிரிமீயத் தொகையினை நவம்பர் 30க்குள் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்ட காரணத்தினால் உடனடியாக விவசாயிகள் இப்பயிர் காப்பீட்டு பிரிமீயத்தை செலுத்தினால் நவம்பர்30ம் தேதிக்குள் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டால் கணக்கீடு செய்யப்பட்டு உடனடியாக பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். எனவே அக்டோபர்15ம் தேதிக்குள் பயிர் காப்பீட்டுத் தொகையினை செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 2016-17ல் விவசாயிகள் பெருமளவில் பயிர்காப்பீடு தொகையினை செலுத்தப்பட்டுள்ளார்கள். அதன்மூலம் ரூ.3400 கோடி பயிர் காப்பிட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் 72 முதல் 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. சிதம்பரம் பகுதியில் 60 முதல் 70 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளது. வீரன்கோவில் திட்டு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மழையால்பாதிக்கப்படுகிறது என்று நான் கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது இங்கு காங்கீரிட் தடுப்பு அமைக்கப்பட்டது. அதன் அருகிலே இந்த கிராமக்கள் செல்ல சிமண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த காங்கீரிட் தடுப்பால் சாலை பாதுகாக்கப்பட்டுள்ளது. சாலையின் அடுத்தபக்கத்திலும் காங்கீரிட் தடுப்பு அமைத்து வெள்ளபாதிப்பில் நிரந்தர தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறினார்.  

 

கடலூர் சார் ஆட்சியர் சரயூ, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொறுப்பு) மகேந்திரன், சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன்,சிதம்பரம்வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) வெற்றிவேல்,இணை இயக்குநர் (வேளாண்மை) அண்ணாதுரை, துணை இயக்குநர் (தோட்டக்கலை) ராஜாமணி, சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசு, அணைக்கரை உதவி செயற்பொறியாளர் அருணகிரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன்,சிதம்பரம் வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும்  விவசாய சங்க தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், விவசாய சங்க கூட்டியக்க ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.