Skip to main content

குடும்பத்தாரை நம்பி வீட்டுக்கு வந்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை... சோழபுரத்தில் கொடூரம்!

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

newlywed couple who came home relying on their family ... Atrocities in Cholapuram!

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தங்கை காதல் திருமணம் செய்து கொண்டதை எதிர்த்த நிலையில் பெண்ணின் சகோதரர்கள், தங்கையையும் அவரது கணவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் வாழ்ந்துவரும் சக்திவேல், ரஞ்சித் என்பவர்களின் தங்கை சரண்யா. சென்னையில் நர்ஸாக வேலை பார்த்து வந்த சரண்யா திருவண்ணாமலையை சேர்ந்த மோகன் என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு சகோதரர்கள் சக்திவேல், ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட சரண்யா-மோகன் தம்பதியினர் சோழபுரம் வந்துள்ளனர். சரண்யாவின் குடும்பத்தினர் சமாதானமாக போய்விடலாம் என பேசி இருவரையும் விருந்துக்கு அழைத்ததன் பேரில் அவர்கள் சோழபுரம் வந்ததாகக் கூறப்படுகிறது. சரண்யாவின் குடும்பத்தினர் பேச்சை கேட்டு விருந்துக்கு வந்த சரண்யா மற்றும் மோகன் ஆகியோர் வீட்டில் அமர்ந்திருக்க, வீட்டுக்கு வந்த சகோதரர்கள் சக்திவேல் மற்றும் ரஞ்சித் இருவரையும் வீட்டிற்கு வெளியே வாசலுக்கு வரச்சொல்லி அழைத்துள்ளனர். அப்பொழுது வெளியே வந்த புதுமண தம்பதிகளை சக்திவேலும், ரஞ்சித்தும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே சரண்யாவும் மோகனும் துடிதுடித்து உயிரிழந்தனர்.

 

இந்த சம்பவம் குறித்து திருவிடைமருதூர் டிஎஸ்பி அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய நிலையில், கொலையில் ஈடுபட்ட சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் சகோதரர் சக்திவேல், உறவினர் ஒருவருக்கு  சரண்யாவை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரத்தில் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் புதுமண தம்பதிகளின் பெட்டி படுக்கைகள் வீதியில் கிடக்க இருவரும் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

    

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.