Skip to main content

கட்சிக்கொடி பேனர்களுக்கு தடை-ஐ.பி.எல்.லில் புதிய கட்டுப்பாடுகள்

Published on 09/04/2018 | Edited on 09/04/2018

நாளை  தமிழகத்தில் நடக்கவிருக்கும் சென்னை-கொல்கத்தா போட்டியைக் காணவரும் ரசிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் போட்டியை காணவரும் ரசிகர்கள் கட்சி கொடிகள், பேனர்கள், மின்னுனு பொருட்களான மொபைல், லேப்டாப், கேமரா போன்றவை எடுத்துவரக்கூடாது என நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

IPL

 

ஏற்கனவே எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள் மற்றும் தீப்பெட்டி, உணவு, தண்ணீர் பாட்டில்  போன்ற பொருள்களுக்கு தடைவிதித்திருந்தாலும் தற்போது பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது . அதேபோல் பார்வையாளர்கள் யாரேனும் மைதானத்தை வரம்பு மீறி அடைந்தால் வெளியேற்றப்படுவார்கள். ஒழுங்கின செயல்களில் பார்வையாளர்கள் ஈடுபட்டாலும் வெளியேற்றப்படுவார்கள் என  தெரிவித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

அதேபோல் 2-ஆம் தேதி விற்பனையான டிக்கெட்டின் பின்புறம் கருப்பு உடை அணிந்துவருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அச்சிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது .

சார்ந்த செய்திகள்