Skip to main content

“டெட்ரா பேக்குகள் சுற்றுச்சூழல் மாசு பிரச்சனையை ஏற்படுத்தாது” - அமைச்சர் முத்துச்சாமி

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Minister Muthusamy speech on Tasmac

 

அரசு சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு ‘எழுத்தாளர் கலைஞர் முத்தமிழ் தேர்’ அலங்கார ஊர்தி ஈரோடு வந்தது. ஈரோடு காமராஜர் மாநகராட்சி பள்ளி அருகே வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன்,  மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். 

 

பள்ளி மாணவர்கள் வாகனத்தை பார்வையிட்டு, மறைந்த தலைவரின் புகைப்படங்கள், புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு மற்றும் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய படைப்புகளை பார்வையிட்டனர். அது திருப்பூரில் இருந்து வந்து, மாலை கரூர் மாவட்டம் சென்றது. ஈரோட்டில், ஈரோடு மாநகராட்சியின் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வண்டியை பார்வையிட முழு நாள் அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்துசாமி, கலைஞரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்த ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது என்றார். 

 

Minister Muthusamy speech on Tasmac

 

தொடர்ந்து பேசிய அவர், “டாஸ்மாக் டெட்ரா பேக்குகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து அரசால் அமைக்கப்பட்ட குழுவின் முழு அறிக்கை கிடைத்ததும், அது உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் முடிவுக்கு பிறகு டெட்ரா பேக்குகள் அறிமுகப்படுத்தப்படும். டெட்ராபேக்குகள் சுற்றுசூழல் மாசு பிரச்சனையை ஏற்படுத்தாது. இப்போது குழு மற்ற மாநிலங்களில் உள்ள டெட்ரா பேக்குகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. மது விற்பனையை அதிகரிக்க அரசு விரும்பவில்லை. உண்மையில், அதன் நுகர்வை குறைக்க விரும்புகிறோம். தீபாவளியின் போது மகிழ்ச்சிக்காக மது அருந்துகின்றனர். அன்று நாங்கள் விற்பனையை ஊக்குவிக்கவில்லை. மதுக்கடைகள் திறப்பதை முன்கூட்டியே திறந்து சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்போம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.