Published on 26/02/2020 | Edited on 26/02/2020
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். டெல்லி வன்முறையை கட்டுப்படுத்தாத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். டெல்லியில் வன்முறை ஒடுக்காவிட்டால் பதவி விலகுங்கள்" என்று பேசினார்.
![makkal needhi maiam party kamal hassan tweet](http://image.nakkheeran.in/cdn/farfuture/sMVmKk0fUlNbsHG3fHed4DcWnv_boQhEhK86Di38MwQ/1582731968/sites/default/files/inline-images/sabas.jpg)
இதற்கு வரவேற்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி; தனி வழி அல்ல; ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை; வருக, வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.