Skip to main content

தற்கொலைக்கு முன் மாணவி பிரதீபா நீட் தேர்வில் மதிப்பெண் கேட்டு எழுதிய கடிதம்!

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
letter


2018ஆம் ஆண்டு நீட் தேர்வில் வினாக்கள் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டு இருப்பதால் அதற்கு மதிப்பெண்கள் கேட்டு விண்ணப்பிப்பதற்காக மாணவி பிரதீபா எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். கூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா 12 ஆம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்த பிரதீபாவுக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் தான் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. தனியார் கல்லூரியில் சேரும் அளவிற்கு தனது பெற்றோர்களிடம் பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்து படிப்பில் சேரவில்லை.

தொடர்ந்து மனதைரியத்துடன் நீட் தேர்வுக்கான வகுப்புகளுக்கு சென்று இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் நேற்று, வந்த நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. அந்த விரக்தியில் மனமுடைந்த அவர் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் முன்பு மாணவி தமிழ் மொழியில் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் வினாக்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துள்ளார். பிரதீபா எழுதியுள்ள அந்த கடிதத்தில்,

2018 ஆண்டு மே 6 ஆம் தேதி நான் தமிழ்மொழியில் நீட் தேர்வு எழுதினேன். தமிழ் மொழியில் இருந்த வினாத்தாள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு கேட்கப்பட்டிருப்பதால் அந்த வினாக்களுக்கு அதற்குரிய 4 மதிப்பெண்கள் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சார்ந்த செய்திகள்